செய்திகள் :

உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியா வந்த ஆஸி, வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - இந்தூர் இளைஞர் கைது

post image

நடப்பு மகளிர் உலகக்கோப்பையில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் இரண்டு வீராங்கனைகள் மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

Australia Women's Team
Australia Women's Team

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நவம்பர் 2 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உட்பட 8 நாடுகளை சேர்ந்த அணிகள் இந்த தொடரில் ஆடுகின்றன. தாலியா மெஹ்ராத் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அந்த அணி தங்களது கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இன்று இந்தூர் மைதானத்தில் சந்திக்கவிருக்கிறது. இதற்காக ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனைகள் கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசத்தின் இந்தூரில் முகாமிட்டுள்ளனர்.

கடந்த வியாழனன்று மாலையில் இரண்டு வீராங்கனைகள் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து அருகிலுள்ள காபி ஷாப்புக்கு நடந்து சென்றனர்.

செல்லும் வழியில் மர்ம நபர் ஒருவர் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த வீராங்கனைகள் தங்கள் மொபைல் மூலம் அவசர செய்தியை அணி நிர்வாகத்துக்கு அனுப்பினார்கள்; அணி நிர்வாகம் வந்து வீராங்கனைகளை அழைத்து சென்றது.

Australia Women's Team
Australia Women's Team

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அகீல் கான் என்பவரை கைது செய்துள்ளனர்.

விளையாட்டுலகமே உற்றுநோக்கும் ஒரு பெரிய தொடரில் ஆட வந்திருக்கும் வீராங்கனைகளுக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி: மனைவியை பிரிந்து மாணவி மீது காதல் - அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்; மாணவியின் தந்தை வெறிச்செயல்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்துள்ள முக்குறும்பை ஊராட்சிக்குஉட்பட்ட அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன் (வயது 27). தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்துவந்த வடிவேலனுக்கு கடந்த இரண்டு ஆண்ட... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் வேறு நபருடன் பழக்கம்? - 9 ஆண்டு காதலியை குத்தி குத்திக் கொன்று தற்கொலை செய்த வாலிபர்

மும்பை பரேல் பகுதியை சேர்ந்தவர் சோனு(24). வேலை இல்லாத சோனு ஏதாவது கேட்டரிங் வேலைகளுக்கு செல்வது வழக்கம். இவர் அதே பகுதியில் வசிக்கும் மனிஷா யாதவ்(24) என்ற பெண்ணை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ம... மேலும் பார்க்க

கோவை: `பல பெண்களுடன் தொடர்பு; முதல் திருமணத்தை மறைத்து.!’- காவலர் மீது புகார் அளித்த மனைவி

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா தேவி (26) . இவர் கோவை டிஜிபி அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்த மனுவில், “எனக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு போத்தனூர் காவல் நிலையத்த... மேலும் பார்க்க

`சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டவில்லை; பணமும் பறிக்கவில்லை' - ரியாவுக்கு சிபிஐ நற்சான்று

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இத்தற்கொலைக்கு சுஷ... மேலும் பார்க்க

``வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.3 லட்சம்'' - கையும் களவுமாக சிக்கிய நாகர்கோவில் இன்ஸ்பெக்டர்

நேசமணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் மீது நேசமணி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது. அந்த வழக்கில் இருந்து சந்தை ரா... மேலும் பார்க்க

கோவை: அதிவேகமாக மரத்தில் மோதிய கார் - 4 இளைஞர்களை காவு வாங்கிய பிறந்தநாள் கொண்டாட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் (20). இவர் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள வாட்டர் வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சபரி அய்யப்பன் (21), தஞ்சாவூர் ம... மேலும் பார்க்க