செய்திகள் :

ஊட்டி: காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு; தாராளமாக நுழையும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்

post image

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் அமலில் உள்ளன.

பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக தடை நீடித்து வரும் நிலையில், பிளாஸ்டிக் டம்ளர், கரண்டி, கத்தி, முள் கரண்டி, உறிஞ்சு குழல், தட்டு, பேப்பர் கப், பேப்பர் டம்ளர் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு

மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்களில் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களைப் பயன்படுத்த, விற்பனை செய்ய தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து அபராதம் விதித்து வந்தனர்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறி ஒரு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள் நீலகிரிக்குள் தாராளமாகக் கொண்டு வரப்படுகின்றன.

நீதிமன்ற உத்தரவைக் காற்றில் பறக்க விடும் விதமான விதிமீறல்களை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்
நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்

இது குறித்து தெரிவித்த வருவாய்த்துறையினர், "வெளி மாவட்டம்‌ மற்றும் மாநிலங்களிலிருந்து தனியார் ஆம்னி பஸ்கள் மூலம் ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பலரும் பண்டல் பண்டல்களாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வருகின்றனர்.

ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்கிறோம்.‌ ஊட்டி நகரில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து பார்க்கிங் தளங்களில் ஊட்டி தாசில்தார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளில் சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்" என்றனர்.

வெறிநாய் கடித்து 9 ஆடுகள் இறப்பு; இறந்த ஆடுகளுடன் போராட்டத்தில் குதித்த விவசாயி- புதுக்கோட்டை சோகம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகாவில் அமைந்துள்ளது அம்மாபட்டினம். இந்த ஊரைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பவர் 50- க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில், அப்பகுதியில் சுற... மேலும் பார்க்க

டெல்லி: அந்தரங்க வீடியோவை அழிக்க மறுத்த லிவ் இன் பார்ட்னர்; மாஜி காதலன் துணையோடு எரித்து கொன்ற பெண்

டெல்லியில் உள்ள காந்தி விகார் என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நான்காவது மாடியில் ரமேஷ் என்பவர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து ... மேலும் பார்க்க

இங்கிலாந்து: `பாலியல் வன்கொடுமை, இன ரீதியான தாக்குதல்’ - இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

இங்கிலாந்தின் வால்சல் பகுதியில் வசித்த இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் இன ரீதியாக தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள... மேலும் பார்க்க

Cyber Crime: மும்பையை அச்சுறுத்தும் டிஜிட்டல் கைது; 218 பேரிடம் ரூ. 112 கோடி பறிப்பு; திணறும் போலீஸ்

நாடு முழுவதும் டிஜிட்டல் கைது மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்து தவிக்கின்றனர். போலீஸார் இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய... மேலும் பார்க்க

குமரி: 14 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; இன்ஸ்பெக்டர் லஞ்ச வாங்கி சிக்கியதை தொடர்ந்து அதிரடி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் ரூ.1.15 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. ஒரு வழக்கில் இருந்து பெயரை ந... மேலும் பார்க்க

உயிரிழந்த பெண் டாக்டர்; SI செய்த வன்கொடுமை; காதலனின் பகீர் வாக்குமூலம்

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா அருகில் உள்ள பால்டன் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 28 வயது பெண் டாக்டர் தன்னை சப் இன்ஸ்பெக்டர் கோபால் என்பவர் 4 முறை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று எழுதி வைத்துவிட்டு... மேலும் பார்க்க