செய்திகள் :

"தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு திரும்ப வேண்டும்" - சு.வெங்கடேசன் எம் பி கூறுவது என்ன?

post image

மதுரையில் இரண்டாவது ரயில் முனையமாக கூடல் நகர் ரயில் நிலையத்தை மாற்றி அறிவிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ரயில்வே அதிகாரிகளுடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது ரயில் முனையமாக மாற்றுவதற்கான ஒருங்கிணைந்த ஏற்பாடுகள் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளோம். இன்றைய கூட்டத்தில் மிக முக்கியமாக கூடல் நகர் ரயில் நிலையத்திற்காக குறிப்பாக பயணிகள் வந்து செல்வதற்கான வசதிகள் சொல்வதில் மூன்று துறையின் ஒருங்கிணைப்பு தேவைப்பட்டது. ரயில்வே துறை, நெடுஞ்சாலைத்துறை, மற்றும் மதுரை மாநகராட்சி அதற்கான இரண்டு கூட்டங்கள் நடத்தி தற்போது அதை முறைப்படுத்தி இருக்கின்றோம்,

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (S.I.R) 12 மாநிலங்களில் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வாக்காளர் இணைப்பு, சேர்ப்பு என்பது தேர்தல் ஜனநாயக முறையில் இதயம் போன்றது. ஆனால் இன்று தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சி இதயத்தை அரிக்கின்ற ஒரு செயல்.

தேர்தல்
தேர்தல்

ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயல் இது, தமிழ்நாடு மிக வலிமையாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பீகாரில் மூன்று லட்சம் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது.

தேர்தல் ஆணையத்தை தங்களது கை பொம்மையாக இயக்குவதற்கு இவர்கள் ஏற்பாடு  செய்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை பாஜக வரவேற்கிறது, பாஜகவின் நடவடிக்கையை அதிமுக வரவேற்கிறது இவ்வாறு இவர்கள் மூவரும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறார்கள். அதிமுக இன்று இருக்கும் நாளை இல்லாமல் இருக்கும். ஆனால், நமக்கு பிரச்னை அதுவல்ல, அனைத்துக் கட்சிகளும் விழிப்போடு இருந்து தடுக்கு வேண்டியது நம் கடமை.

ஓட்டைகளை உருவாக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை கிடையாது, ஓட்டைகளை அடைப்பது தான் கடமை, இந்தியா கூட்டணிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நிறுத்தப்பட வேண்டும். இந்தியா முழுவதும் கைவிடப்பட வேண்டும், தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு திரும்ப வேண்டும், எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்குவது இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான தேர்தல் முறையை சிதைப்பது போல, இதயம் போன்ற தேர்தல் முறையை அழிக்க முயற்சி நடக்கிறது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

ஜனநாயகத்தில் தேர்தல் எனும் இதயத்தை அரிக்கிற செயல். தேர்தல் ஆணையம் கட்சிகளின் எந்தக்கேள்விக்கும் முறையாக பதில் அளிக்கவில்லை. ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். பீகாரில் 3 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆரில் வாக்குகள் நீக்கப்படுவது கண்கூடாகத் தெரியும். குறிப்பிட்ட சமூக மக்களின் வாக்குகளை நீக்கும் வகையில் நடவடிக்கை.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு தேர்தல் ஆணையம் ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தை கைப்பொம்மையாக ஒன்றிய அரசு பயன்படுத்த உள்ளது. பாஜகவின் அரசியல் நலனுக்கு எதுவெல்லாம் வாய்ப்போ அதையெல்லாம் தேர்தல் ஆணையம் செய்கிறார்கள்.

பாஜக வரவேற்றதால் வரவேற்கும் அதிமுகவின் நோக்கம் மக்கள் நோக்கமல்ல. ஜனநாயக அடிப்படையான தேர்தல் முறை காப்பாற்ற வேண்டும். தேர்தல் ஜனநாயகத்தில் சிதைவை ஏற்படுத்தக்கூடாது. நாங்கள் விழிப்போடு இருப்போம். தேர்தல் ஆணையம் தேர்தல் ஜனநாயக முறையில் பெருச்சாளிகள் நுழைய ஓட்டை ஏற்படுத்தக்கூடாது" என்றார்.

கோவையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா!

குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற தமிழக அமைச்சர்கள் குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற பொதுமக்கள்குடியரசு துணைத் தலைவரை வாழ்த்திய அதிமுகவை சேர்ந்த வேலுமணி குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்கோயம்புத்த... மேலும் பார்க்க

'தேர்தல் தோல்வி... பிரதமரிடம் இருந்து வந்த அழைப்பு..' - மனம் திறந்த சி.பி.ராதாகிருஷ்ணன்

சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டின் குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று தமிழ்நாடு வந்தார். இன்று காலை கோவை வந்த அவருக்கு தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா அரங்கில் பாராட்டு விழா ந... மேலும் பார்க்க

'மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பு' - ஓபிஎஸ்-ஸின் கருத்து வியூகமா? குழப்பமா?

அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தன் அரசியல் பயணத்தை 'அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' மூலம் தனித்துத் தொடங்கினார், ஓ.பி.எஸ். பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணியில் இணைந்தார். எனினும், க... மேலும் பார்க்க

'விஜய் 8 பேர் கால்லையும் விழுந்து மன்னிப்பு கேட்டாரு'- சந்திப்பு குறித்து பாதிக்கப்பட்ட குடும்பம்

கரூரில் கடந்த செப். 27-ம் தேதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் தவெக சார்பில் கொடுக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடு... மேலும் பார்க்க

TVK: `டெல்டா காரன் ஸ்டாலின் அரசுக்கு என் கேள்விகள்' - நெல் கொள்முதல் விவகாரத்தில் விஜய்

தமிழகத்தில் இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்துவரும் சூழலில், நெல் கொள்முதல் விவகாரத்தில் திமுக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மையால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் முட்டைகள் தேக்கத்தில் ... மேலும் பார்க்க

Bihar Election: சொந்தக் கட்சி சீனியர்களை மாறி மாறி நீக்கும் JDU, RJD; பரபரக்கும் பீகார் களம்!

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளமும... மேலும் பார்க்க