செய்திகள் :

மும்பை: `காவல் நிலையம் அருகே போதைப்பொருள் தொழிற்சாலை; 5 ஆண்டுகள் விற்பனை ஜோர்' - போலீஸார் அதிர்ச்சி

post image

மும்பையில் எம்.டி. எனப்படும் ஒருவகையான போதைப்பொருளின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இந்த போதைப்பொருளை ஆய்வுக்கூடத்தில் எளிதில் தயாரித்துவிடலாம் என்பதால் சிலர் வீடுகளில் இதனை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

ஏற்கெனவே இப்போதைப்பொருளை தயாரித்த தொழிற்சாலைகள் புனே, மும்பை, சோலாப்பூர் பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

சமீபத்தில் இம்மாத தொடக்கத்தில் மும்பை திலக் நகர் பகுதியில் எம்.டி. போதைப்பொருளுடன் மொஹ்சின் சையத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இக்பால் ஷேக் மற்றும் மெஹ்தாப் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ரெய்டு
ரெய்டு

மூன்று பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் சோஹைல் கான் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு காட்கோபர் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

இவர் கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மும்பை அருகில் உள்ள நாலாசோபாராவில் இருக்கும் பெல்ஹார் என்ற இடத்தில் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சித்திக் என்பவர்தான் மேற்கண்டவர்களுக்கு போதைப்பொருளை சப்ளை செய்து வந்தார். இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோதுதான் போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை இருக்கும் இடம் தெரிய வந்தது.

உடனே அந்த இடத்தில் போலீஸார் ரெய்டு நடத்தினர். அங்கு 6 கிலோ எம்.டி. போதைப்பொருள் மற்றும் அது தயாரிக்க தேவையான ரசாயன பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.13 கோடியாகும்.

கைது
கைது

1400 சதுர அடியில் பெரிய அளவில் போதைப்பொருளை தயாரிக்கும் வகையில் இயந்திரங்களை பொருத்தி இருந்தனர். ஒவ்வொரு மாதமும் 50 கிலோ போதைப்பொருள் தயாரித்து மும்பை முழுவதும் பி.எம்.டபிள்யூ. கார்களில் எடுத்துசென்று விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் தான் போலீஸ் நிலையம் இருந்தது. ஆனாலும் போலீஸாரால் அந்த போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து சீனியர் அதிகாரி ஜிதேந்திரா பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அத்தொழிற்சாலை இருந்த இடத்தின் உரிமையாளருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆணவக்கொலையால் சீரழிந்த இரண்டு குடும்பங்கள் - `சாதி' யால் பறிபோன உயிர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு இராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரியான ராமசந்திரன் (24) பால் கறவை தொழில் செய்து வந்திருக்கிறார். அப்பா செல்வம் ஆட்டோ ஒட்டுநர். உடல்நிலை சரியில்லாத நிலையில் ... மேலும் பார்க்க

சென்னை: நள்ளிரவில் பைக் டாக்ஸியில் பயணித்த வடமாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைது

வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கணவருடன் சென்னை, மதுரவாயலில் வசித்து வருகிறார். இவர், கடந்த 26.10.2025-ம் தேதி இரவு பைக் டாக்ஸி மூலம் பள்ளிக்காரணைக்கு சென்றிருக்கிறார். பின்னர், அதே பைக... மேலும் பார்க்க

நெல்லை: வீடு புகுந்து மாணவிகள் மீது கொடூரமாக தாக்கிய ரவுடி கும்பல்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

முன்பகை காரணமாக வீட்டுக்குள் நுழைந்த ரௌடி கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்து வீசியதுடன், உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக தாக்கினார்கள். அதில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.நெல்லை மாவட்... மேலும் பார்க்க

அடுக்குமாடியில் வெடித்த சிலிண்டர்; முன்னாள் காதலன் உதவியால் நடந்த கொலை - என்ன நடந்தது?

டெல்லி திமர்பூர் பகுதியில் இம்மாத மத்தியில் அடுக்கு மாடி குடியிருப்பில் ராம்கேஷ் மீனா (32) என்பவர் தீப்பிடித்து எரிந்து கிடந்தார். அவர் ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு இறந்ததாக ஆரம்பத்தில் போலீஸார் நம்பி... மேலும் பார்க்க

அடகுவைத்த 8 கிலோ நகைகள் திருட்டு; வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் கைது - ஈரோட்டில் நடந்தது என்ன?

ஈரோடு முனிசிபல் காலனியில் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி பல ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து உள்ளனர். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி வங்கியின் தலை... மேலும் பார்க்க

ரூ.239 கோடி: `7 ஸ்டார் ரிசார்ட்டில் ஒரு மாதம் கொண்டாட்டம்’ - அபுதாபியில் லாட்டரி வென்ற கேரளா வாலிபர்

கேரளா மாநிலத்தை சேர்ந்த அனில் குமார் என்பவர் அபுதாபியில் வசித்து வருகிறார். அனில் குமார்(29), எதாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற நம்பிக்கையில் அடிக்கடி லாட்டரி சீட்டு எடுப்பது வழக்கம். அவ்வாறு அவர் ... மேலும் பார்க்க