செய்திகள் :

கரூர் சம்பவம்: உயிரிழந்தர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு; ஆறுதல் சொன்ன விஜய்

post image

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், விஜய் தரப்பில் உயிரிழந்த குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல்படுத்தினார். அதோடு, உயிரிழந்தவர்களின் உறவினர்களின் வங்கி கணக்குகளில் 20 லட்சம் ரூபாய் வரவு வைத்தனர்.

chennai journey
chennai journey

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் விஜய் பேசியபோது, "விரைவில் உங்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வேன்" என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, த.வெ.க நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை கரூர் அல்லது நாமக்கல்லில் உள்ள ஏதாவது ஒரு மண்டபத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு விஜய் ஆறுதல் சொல்லும் நிகழ்வை நடத்த முயன்றனர்.

ஆனால், மண்டப உரிமையாளர்கள் தங்கள் மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொள்ளவில்லை என்று த.வெ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு பாதிக்கப்பட்ட மக்களை ஆம்னி பேருந்தில் அழைத்து வரச்சொல்லி விஜய் சந்தித்தார். அப்போது, பலரது காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், "கடைசி வரைக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். இறந்தவர்களின் பிள்ளைகளின் கல்விச்செலவை ஏற்றுக்கொள்வேன்" என்று உருக்கமாகப் பேசி நம்பிக்கை வார்த்தைகள் கூறியதாகத் தெரிகிறது.

தவிர, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு செய்யப்பட்ட ஆவணத்தையும் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

insurance - காப்பீடு - இன்ஷூரன்ஸ்
insurance - காப்பீடு - இன்ஷூரன்ஸ்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்தப்பட்ட ஆவணங்களையும், உயிரிழந்தோரின் உறவினர்களிடம் விஜய் வழங்கியுள்ளார்.

மேலும், இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு செய்து தருவதாக உறுதியாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், த.வெ.க தலைவர் விஜய் வழங்கிய மருத்துவக் காப்பீட்டு ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஆந்திரா பேருந்து தீ விபத்து: போதையில் பைக் ஓட்டிய இளைஞர்கள்தான் காரணமா? - போலீஸ் சொல்வது என்ன?

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தெகுரு என்ற இடத்தில் பெங்களூருவை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று அதிகாலையில் தீப்பிடித்து எரிந்து 20 பேர் உயிரிழந்தனர். பலர் பஸ்சில் இருந்து ஜன்னல் ... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: நீதிமன்றத்தில் சிபிஐ ஆவணங்கள் தாக்கல் - நகல் கேட்டு தவெக-வினர் மனு!

கரூரில் கடந்த மாதம் 27 - ம் தேதி வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் வெளியான சம்பவம் தொடர்பாக, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சி... மேலும் பார்க்க

ஆந்திரா பேருந்து தீ விபத்து: `ஏ.சி. பஸ் என்பதால்’ - கோர விபத்தை விளக்கும் மீட்கப்பட்ட பயணிகள்

தேசிய நெடுஞ்சாலை 44-ல் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த தனியார் வால்வோ பேருந்து ஒன்று கர்னூல் பகுதியில் பைக் மீது மோதியதில் ஏற்பட்ட திடீர் விபத்தால், பேருந்து முழுமையாகத் தீ பற்றி எர... மேலும் பார்க்க

ஆந்திரா: அதிகாலையில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து - 15 பேர் பலி; பயணிகளின் நிலை என்ன?

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் கர்னூலில் இன்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது.ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது ம... மேலும் பார்க்க

கனமழையால் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்– உணவருந்தியபோதே தாய், மகள் உயிரிழந்த சோகம்

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், கடந்த 16-ம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதற்கிடையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகம் மற்றும் புதுச... மேலும் பார்க்க

மும்பை: 12 மாடி கட்டிடத்தில் தீ விபத்து; 5 பேர் பலி, 10 பேருக்கு தீவிர சிகிச்சை -நள்ளிரவில் சோகம்

மும்பை அருகிலுள்ள நவிமும்பை வாஷி பகுதியில் செக்டர் 14-ல் இருக்கும் ரஹஜா ரெசிடென்சி அடுக்குமாடி கட்டிடத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் 10வது மாடியில் வசிக்கும் கமலா ஜெயின் வ... மேலும் பார்க்க