செய்திகள் :

கனமழையால் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்– உணவருந்தியபோதே தாய், மகள் உயிரிழந்த சோகம்

post image

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், கடந்த 16-ம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதற்கிடையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதேபோல நேற்று 21.10.2025 அன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய மழை இன்று 22.10.2025 காலை வரை நீடித்தது.

உயிரிழந்த அசோதை
உயிரிழந்த அசோதை

அதில் அதிகப்படியாக புதுச்சேரி காலாப்பட்டில் 25 செ.மீ மழையும், தமிழகத்தில் கடலூரில் 17.4 செ.மீ மழையும் பதிவாகியிருக்கிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று காலை வரை கனமழை பெய்தது. அப்போது சிதம்பரம் அருகே இருக்கும் ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அசோதையும், அவரின் மகள் ஜெயாவும் தங்கள் குடிசை வீட்டில் உணவருந்தியபடி அமர்ந்து கொண்டிருந்தனர்.

அந்தக் குடிசைக்கு அருகிலேயே அவர்களுக்கு சொந்தமான ஓட்டு வீடு ஒன்றும் இருந்தது. தொடர்ச்சியான மழையால் அந்த ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து, அசோதையும், ஜெயாவும் அமர்ந்திருந்த குடிசை மீது விழுந்தது. அது சிமெண்ட் சுவர் என்பதால் அந்தக் குடிசையும், அதற்குள்ளிருந்த அசோதை, ஜெயாவும் அந்த இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்கள். அப்போது அவர்களின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.

உயிரிழந்த ஜெயா
உயிரிழந்த ஜெயா

ஆனால் அதற்குள் அசோதையும், ஜெயாவும் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்கள். இதற்கிடையில் தகவல் கேள்விப்பட்ட புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வு சோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயும், மகளும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவத்தால், சோகத்தில் மூழ்கியிருக்கின்றனர் ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராம மக்கள்.

மும்பை: 12 மாடி கட்டிடத்தில் தீ விபத்து; 5 பேர் பலி, 10 பேருக்கு தீவிர சிகிச்சை -நள்ளிரவில் சோகம்

மும்பை அருகிலுள்ள நவிமும்பை வாஷி பகுதியில் செக்டர் 14-ல் இருக்கும் ரஹஜா ரெசிடென்சி அடுக்குமாடி கட்டிடத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் 10வது மாடியில் வசிக்கும் கமலா ஜெயின் வ... மேலும் பார்க்க

வங்காளதேசம்: டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து; விமான சேவைகள் பாதிப்பால் பயணிகள் அவதி!

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் கார்கோ முனையத்தில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சரியாக பிற்பகல் 2:30 மணியளவில்... மேலும் பார்க்க

`வானமே இடிஞ்சு விழுந்த மாதிரி இருந்துச்சி’ - கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த சூழலில் வேப்பூரை அடுத்த அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். ... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: நொடியில் தீப்பற்றி எரிந்த பேருந்து, 20 பயணிகள் தீயில் கருகி பலி - என்ன நடந்தது?

ஜெய்சல்மாரில் நடந்த கொடூர விபத்தினால் பேருந்தில் இருந்த 20 பேர் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதியம் 3 மணியளவில் ஜெய்சல்மாரிலிருந்து ஜோத்பூர் புறப்பட்ட ப... மேலும் பார்க்க

தடுப்புக் கம்பி மீது மோதிய ரயில் எஞ்சின் மின் கருவி; விபத்திலிருந்து தப்பிய ராமேஸ்வரம் ரயில்

ராமநாதபுரம் - ராமேஸ்வரம் வழித்தடத்தில் டீசல் எஞ்ஜின் பொறுத்திய ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த வழிதடம் மின்சார வழி தடமாக மாற்றப்பட்ட நிலையில் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் மின்சார ரயில் எஞ்சின்களை கொ... மேலும் பார்க்க

வால்பாறை: வீடு புகுந்து தாக்கிய யானை - ஒன்றரை வயது குழந்தை, பாட்டி உயிரிழந்த சோகம்

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் வால்பாறை நகரம், சுற்றுவட்டாரத்தில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் யானை, கரடி, காட்டு மாடு, புலி, சிறுத்தை ... மேலும் பார்க்க