செய்திகள் :

வால்பாறை: வீடு புகுந்து தாக்கிய யானை - ஒன்றரை வயது குழந்தை, பாட்டி உயிரிழந்த சோகம்

post image

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் வால்பாறை நகரம், சுற்றுவட்டாரத்தில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் யானை, கரடி, காட்டு மாடு, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

வால்பாறை
வால்பாறை

இதனால் அங்கு மனித – வனவிலங்கு மோதல் அதிகளவு நடைபெறும். இதில் முதியவர்கள், குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் வேவர்லி எஸ்டேட் அருகே காடம்பாடி பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஒற்றை யானை ஊருக்குள் புகுந்துள்ளது. திடீரென அந்த யானை அங்குள்ள வீட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளது. அந்த வீட்டில் அஞ்சலா (வயது 55) என்கிற மூதாட்டி, அவரின் ஒன்றரை வயது பேத்தி ஹேமாஸ்ரீ உறக்கத்தில் இருந்துள்ளனர்.

யானை
யானை

யானை அவர்களை தாக்கியத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அஞ்சலா பலத்த காயமடைந்தார்.

அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காயம் தீவிரமாக இருந்ததால் அஞ்சலா சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். தகவலறிந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஞ்சலா
குழந்தை

இந்த சம்பவம் வால்பாறையில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்காணித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்னல் வேகத்தில் பறந்த கார்; கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நடந்த கோர விபத்து - 3 பேர் பலி

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை 10.10 தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயரிட்டு கடந்த 9-தேதி திறந்து வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: பைக் மீது மோதிய லாரி; கணவரின் கண்முன் துடிதுடித்து இறந்த மனைவி; தவிக்கும் பிள்ளைகள்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் நடந்த கொடூரமான வாகன விபத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அங்குள்ள பாட்டியானா என்ற கிராமத்தைச் சேர்ந்த அனுராதாவும்(35), அவரது கணவர... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அரசு பேருந்து சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் உயிரிழந்த சோகம்!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி வழியாக தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது செங்க... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த மகள்; வாக்குறுதியை நிறைவேற்ற இறுதிச்சடங்கில் பிறந்தநாள் கேக் வெட்டிய தந்தை

கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திரஜித் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் மத்திய பிரதேசத்திற்கு பிக்னிக் சென்று இருந்தார். சென்ற இடத்தில் லாரி ஒன்று அவர்களின் கார் மீது மோதியது. இதில் இந்திரஜித் மனைவி மற்று... மேலும் பார்க்க

மும்பை: "ஒரே மகளை இழந்துவிட்டோம்" - 19வது மாடியில் இருந்து சிமெண்ட் பிளாக் விழுந்து இளம்பெண் பலி

மும்பை மேற்கு பகுதியில் உள்ள ஜோகேஸ்வரி என்ற இடத்தில் வசித்து வந்தவர் சன்ஸ்ருதி அமின் (22). இப்பெண் தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தார். அவர் தனது வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குச் சென்று கொண்டிர... மேலும் பார்க்க

நாமக்கல்: ஓடும் பேருந்திலிருந்து கழன்று விழுந்த கதவு... அரசு பேருந்தின் அவலநிலை!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் கே1 அரசு பேருந்து தினந்தோறும் சென்று வருகிறது. பேருந்தை ஓட்டுநர் ராமு என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் குமாரபாளையத்தில் இருந்து பள்ளி... மேலும் பார்க்க