செய்திகள் :

மும்பை: "ஒரே மகளை இழந்துவிட்டோம்" - 19வது மாடியில் இருந்து சிமெண்ட் பிளாக் விழுந்து இளம்பெண் பலி

post image

மும்பை மேற்கு பகுதியில் உள்ள ஜோகேஸ்வரி என்ற இடத்தில் வசித்து வந்தவர் சன்ஸ்ருதி அமின் (22). இப்பெண் தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தார். அவர் தனது வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது வீட்டிற்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடத்திலிருந்து சிமெண்ட் பிளாக் ஒன்று அவர் மீது விழுந்தது.

சிமெண்ட் பிளாக் சன்ஸ்ருதியின் தலையில் விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவரைச் சூழ்ந்து பொதுமக்கள் நின்றுகொண்டிருந்தனர். அந்நேரம் சன்ஸ்ருதியின் தந்தை அனில் தனது வீட்டில் இருந்து வெளியில் வந்தார்.

அவரது வீட்டில் இருந்து சற்று தள்ளி பொதுமக்கள் மொத்தமாகக் கூடி நிற்பதைப் பார்த்து அங்கு அனில் சென்றார். அங்குச் சென்று பார்த்தபோது சன்ஸ்ருதி ரத்தவெள்ளத்தில் கிடந்தார். உடனே அவரை அனில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

விழுந்த சிமெண்ட் பிளாக்
விழுந்த சிமெண்ட் பிளாக்

ஆனால் அதற்குள் சன்ஸ்ருதி இறந்து போனார். இது குறித்து அனில் கூறுகையில், ''எனது மகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் வங்கி வேலையில் சேர்ந்திருந்தார். நான் வீட்டை விட்டு வெளியில் வந்தபோது அருகில் கூட்டமாக இருந்தது.

என்னவென்று பார்க்கச் சென்றபோது எனது மகள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அதற்குள் இறந்துவிட்டார். இப்போது எங்களது ஒரே மகள் எங்களை விட்டுச் சென்றுவிட்டார் என்பதை எங்களால் நம்பமுடியவில்லை'' என்றார்.

இதனை நேரில் பார்த்த சந்தீப் என்பவர் கூறுகையில், ''சம்பவம் நடந்த இடத்தில் அடிக்கடி மேலிருந்து செங்கல் மற்றும் இரும்பு கீழே விழும். இதற்கு முன்பு இதுவரை யார் மீதும் விழுந்ததில்லை. அடிக்கடி புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் இருந்து இரும்பு, செங்கல் விழுவது குறித்து புகார் செய்தும் மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சன்ஸ்ருதி வேலைக்குக் கிளம்பிச் சென்றபோது எதிரில் வந்த தனது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரிடம் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்த சில நொடிகளில் அவர் மீது 19வது மாடியில் இருந்து சிமெண்ட் பிளாக் விழுந்தது'' என்றார்.

கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு வலை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த வலை மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதால் அதன் மீது விழும் கட்டிடக் கழிவுகள் கீழே வந்துவிடுகிறது. இச்சம்பவத்தையடுத்து மாநகராட்சி நிர்வாகம் கட்டிட கட்டுமானப்பணியை நிறுத்தும்படி பில்டரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாமக்கல்: ஓடும் பேருந்திலிருந்து கழன்று விழுந்த கதவு... அரசு பேருந்தின் அவலநிலை!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் கே1 அரசு பேருந்து தினந்தோறும் சென்று வருகிறது. பேருந்தை ஓட்டுநர் ராமு என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் குமாரபாளையத்தில் இருந்து பள்ளி... மேலும் பார்க்க

மும்பை: பாலத்தின் தடுப்பை உடைத்து கடலுக்குள் பாய்ந்த கார்; குடிபோதையில் கார் ஓட்டிய நபர் மீது வழக்கு

மும்பையின் மேற்கு பகுதியை தென்பகுதியோடு இணைக்கும் விதமாக கடற்கரையையொட்டி கடற்கரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கடலில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்தக் கடல் பாலத்தில் பதிவாலா ... மேலும் பார்க்க

தென்காசி: காதலுடன் சென்ற சிறுமி விபத்தில் பலி; உறவினர்கள் போராட்டம்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் என்பவரது 16 வயது மகள் பதினோராம் வகுப்பு படித்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மரத்தொழில் செய்து வந்த ரமேஷ் என்ற இளைஞரைக் காதலித்த... மேலும் பார்க்க

சேலம்: சாலையைக் கடக்க முயன்ற தலைமைக் காவலர்; லாரி மோதி பலியான சோகம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (40) என்பவர் சேலம் மாநகர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள்... மேலும் பார்க்க

``உங்க பணம், 1 ரூபாய் கூட குறையாது'' - விபத்தில் சிக்கியவர் குடும்பத்தை நெகிழ வைத்த டி.எஸ்.பி!

தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (44). இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் சந்திராவுடன் வசித்து வருகிறார். ராஜாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தனக்க... மேலும் பார்க்க

``சாப்பிட வந்தபோது என் தாயை இழந்துவிட்டேன்'' - ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனை தீவிபத்து; 8 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தீவிபத்து ஏற்... மேலும் பார்க்க