செய்திகள் :

வாணியம்பாடி: பெண் குழந்தையைக் கடத்த முயற்சி? வடமாநில நபரைக் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்

post image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள சின்னமோட்டூர் கிராமத்தில், வடமாநில நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்திருக்கிறார். திடீரென அந்த நபர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த தம்பிதுரை என்பவரின் 3 வயது மகள் தனுஷ்ஸ்ரீயின் வாயில் பிளாஸ்டிக் கவரை அடைத்து கடத்திச்செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்ததும், விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த கிராம மக்கள் சிலர் ஓடிவந்து வடமாநில நபரைப் பிடித்து குழந்தையை மீட்டிருக்கின்றனர். பிறகு, அவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கியிருக்கின்றனர். இது குறித்து தகவலறிந்ததும், அங்கு விரைந்து சென்ற அம்பலூர் காவல் நிலையப் போலீஸார் கட்டி வைக்கப்பட்டிருந்த நபரை மீட்டனர்.

வடமாநில நபர்
வடமாநில நபர்

விசாரணையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரங்கீலா எனத் தெரியவந்தது. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசியதால், ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீஸாரே அந்த நபரை ஏற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி அறிந்த பொதுமக்கள், காவல்துறை உயரதிகாரிகளுக்குத் தெரிவித்ததையடுத்து, ரயில்வே போலீஸாரின் உதவியுடன் அந்த நபர் ஆம்பூர் ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பொது மக்கள் தாக்கியதில் அவர் உடம்பில் காயங்கள் இருந்ததால், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

கும்பகோணம்: கோயிலுக்கு வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 75 வயது அர்ச்சகர் போக்சோவில் கைது!

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம்-மின்வாரிய ஆய்வாளரைக் கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை; விவரம் என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெயகுமார் (56). இவரிடம் தாராபுரத்தை அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `அடிக்கடி குரைக்கின்றன'- குடிபோதையில் நாயை கல்லால் தாக்கிக் கொன்ற வாலிபர்!

துாத்துக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். ஆட்டோ டிரைவரான இவர் தனது வீட்டில் இரண்டு நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் இரண்டு நாய்களையும் வீட்டின் முன் சங்கிலியால் கட்டி போட்டி... மேலும் பார்க்க

ஒரே நாளில் 47 மீனவர்கள் சிறை பிடிப்பு; இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை- மீனவர்கள் அதிர்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம் துவங்கி நாகப்பட்டினம் வரை உள்ள 6 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனர். அதிலும் குறிப்பாக வங்க கடலில் உள்ள பாக் நீரிணை ப... மேலும் பார்க்க

மது விருந்தில் தகராறு: பாலிவுட் நடிகர் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நண்பர்

பாலிவுட்டில் ஜுண்ட் என்ற படம் உட்பட ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் பாபு செத்ரி என்ற பிரியன்ஷு க்ஷத்ரியா(21). மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பாபு செத்ரி நேற்று தனது நண்பர் துரு ஷா என்பவருடன்... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான பிரபல `கூலிப்படைத் தலைவன்’ மரணம் - நாகு என்கிற நாகேந்திரனின் பின்னணி

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் நாகு என்கிற நாகேந்திரன். இவர் சிறுவயது முதலே பாக்ஸராக வேண்டும் என்ற கனவோடு வலம்வந்தவர். அதனால் வடசென்னையிலுள்ள பாக்ஸிங் கோச்சிங்கில் சேர்ந்தார். அங்கே விஜி என்ற பாக்... மேலும் பார்க்க