செய்திகள் :

கும்பகோணம்: கோயிலுக்கு வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 75 வயது அர்ச்சகர் போக்சோவில் கைது!

post image

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர். இக்கோயில் குடமுழுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனாலும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

போக்சோ வழக்கு

இந்நிலையில், கடந்த மாதம் 8ம் தேதி பாபநாசம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இரவு சுமார் 7 மணியளவில் சாமி தரிசனம் செய்வதற்கு கோயிலுக்கு சென்றனர். இதில் அந்த குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரும் உடன் சென்றார். கருவறையில் சாமி தரிசனம் செய்தபோது கோயில் அர்ச்சகர் விஸ்வநாதன் (75) தீபாராதனை காட்டி திருநீர் கொடுத்துள்ளார். அப்போது சிறுமி தன் கையில் வைத்திருந்த பேக்கை வைத்துவிட்டு தரிசனம் செய்துள்ளார்.

பின்னர் அப்படியே பேக்கை மறந்து விட்டு கோயில் வளாகத்திற்கு வந்து விட்டார். குடும்பத்தினருடன் வலம் வந்த சிறுமி உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக பார்த்த போது பேக்கை மறந்து விட்டு வந்தது தெரிந்துள்ளது. உடனே பெற்றோரிடம் சொல்லி விட்டு எடுக்க சென்றுள்ளார். அப்போது யாரும் இல்லாததால் சிறுமிக்கு அர்ச்சகர் விஸ்வநாதன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்கிறார்கள். இது பேட் டச் என்று அர்ச்சகரை கையை தள்ளி விட்டு அங்கிருந்து அழுது கொண்டே ஓடிய சிறுமி பெற்றோரிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார்.

இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் விஸ்வநாதன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் வயது மூப்பு காரணமாக அவர் ஜாமீனில் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Rai வயது மூப்புகாரணமாக ஜாமினில் வெளியே விட்டதாக விபரம் அறிந்த தரப்பில் தெரிவித்தனர்.

கரூர் மரணங்கள்: தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரிக்க சென்னை உய... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம்-மின்வாரிய ஆய்வாளரைக் கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை; விவரம் என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெயகுமார் (56). இவரிடம் தாராபுரத்தை அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `அடிக்கடி குரைக்கின்றன'- குடிபோதையில் நாயை கல்லால் தாக்கிக் கொன்ற வாலிபர்!

துாத்துக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். ஆட்டோ டிரைவரான இவர் தனது வீட்டில் இரண்டு நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் இரண்டு நாய்களையும் வீட்டின் முன் சங்கிலியால் கட்டி போட்டி... மேலும் பார்க்க

ஒரே நாளில் 47 மீனவர்கள் சிறை பிடிப்பு; இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை- மீனவர்கள் அதிர்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம் துவங்கி நாகப்பட்டினம் வரை உள்ள 6 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனர். அதிலும் குறிப்பாக வங்க கடலில் உள்ள பாக் நீரிணை ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி: பெண் குழந்தையைக் கடத்த முயற்சி? வடமாநில நபரைக் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள சின்னமோட்டூர் கிராமத்தில், வடமாநில நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்திருக்கிறார். திடீரென அந்த நபர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த தம்பிதுரை ... மேலும் பார்க்க

மது விருந்தில் தகராறு: பாலிவுட் நடிகர் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நண்பர்

பாலிவுட்டில் ஜுண்ட் என்ற படம் உட்பட ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் பாபு செத்ரி என்ற பிரியன்ஷு க்ஷத்ரியா(21). மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பாபு செத்ரி நேற்று தனது நண்பர் துரு ஷா என்பவருடன்... மேலும் பார்க்க