செய்திகள் :

கேரளா: "வேலையை விடும் திட்டமில்லை" - லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற பிறகும் வேலைக்குச் செல்லும் நபர்

post image

கேரளாவில் பெயிண்ட் கடை ஊழியர் ஒருவருக்கு ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாய் முதல் பரிசாகக் கிடைத்துள்ளது. லாட்டரி விழுந்த பிறகும், அவர் தனது வேலையை விட மனமில்லாமல் மறுநாளே பணிக்குத் திரும்பியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆலப்புழா மாவட்டம் துறவூரைச் சேர்ந்த சரத் எஸ் நாயர் என்ற நபர், கொச்சியில் உள்ள நெட்டூரில் ஒரு பெயிண்ட் கடையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில், இவர் வாங்கிய TH 577825 என்ற எண்ணுக்கு 25 கோடி ரூபாய் முதல் பரிசு கிடைத்துள்ளது.

Lottery
Lottery (representative)

லாட்டரியில் வெற்றி பெற்றது குறித்து மனோரமா நியூஸிடம் சரத் நாயர் கூறியதாவது, "முடிவுகள் வெளியானபோது நான் வேலையில் இருந்தேன். முதலில் எனது சகோதரருக்குத் தகவல் தெரிவித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து வெற்றி பெற்ற எண்ணை உறுதி செய்தோம்.

டிக்கெட்டை வங்கியில் ஒப்படைத்த பிறகே இந்தச் செய்தியை அறிவிக்க முடிவு செய்தோம். வீட்டில் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பரிசுப் பணத்தை என்ன செய்வது என்று இன்னும் திட்டமிடவில்லை" என்று தெரிவித்திருக்கிறார். இதுவே இவர் வாங்கும் முதல் ஓணம் பம்பர் டிக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

பம்பர் பரிசு வென்ற போதிலும், சரத் மறுநாளே தனது வேலைக்குத் திரும்பியிருக்கிறார். அங்கு சக ஊழியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்திருக்கின்றனர்.

அவர் தனது வேலையை இப்போதைக்கு விடும் திட்டம் இல்லை என்றும், நிதி ஆலோசகரைக் கலந்தாலோசித்த பிறகே பரிசுப் பணத்தைச் செலவிடுவது குறித்து முடிவெடுப்பேன் என்றும் கூறியுள்ளார். வெற்றி பெற்ற டிக்கெட்டை துறவூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் அவர் சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் 8வது உயரமான சிகரத்தில் கால் வைத்த இந்தியர்; கின்னஸ் உலக சாதனை படைப்பாரா?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுபம் சாட்டர்ஜி என்ற இளம் மலையேற்ற வீரர், உலகின் 8வது உயரமான சிகரமான மனாஸ்லுவை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையின் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்ப... மேலும் பார்க்க

மலை குன்றை உடைத்து, ஆற்றை திசை திருப்பி.! - ரூ.19,000 கோடியில் கட்டப்பட்ட நவிமும்பை விமான நிலையம்

நாட்டின் பொருளாதார தலைநகரமாக விளங்கும் மும்பையில் ஏற்கனவே இருக்கும் ஒரு விமான நிலையம் பயணிகள் நெருக்கடியால் விழிபிதுங்கியபடி இருக்கிறது. இதையடுத்து விமான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மும்பைக... மேலும் பார்க்க

`முதுகுவலியை குணப்படுத்த' - 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி; அடுத்து நடந்தது என்ன?

சீனாவில், 82 வயதான மூதாட்டி ஒருவர், தனது நாள்பட்ட முதுகுவலியை குணப்படுத்த, நாட்டு வைத்தியம் என்ற பெயரில் 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கடுமைய... மேலும் பார்க்க

Divorce: ரூ.18 லட்சம் கொடுத்து விவாகரத்து வாங்கிய வாலிபர்; பால் குளியலோடு கேக் வெட்டி கொண்டாட்டம்

வாலிபர் ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடிய கதையைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் விவாகரத்து கிடைத்தவுடன் அவரது தாயார் அவருக்கு பாலாபிஷேக... மேலும் பார்க்க

`ரூ.60 கோடி மோசடி வழக்கு' - பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் போலீஸார் 4 மணி நேரம் விசாரணை

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் சேர்ந்து ரூ.60 கோடியை மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவர் 2015ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க