செய்திகள் :

`ரூ.60 கோடி மோசடி வழக்கு' - பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் போலீஸார் 4 மணி நேரம் விசாரணை

post image

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் சேர்ந்து ரூ.60 கோடியை மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவர் 2015ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரை ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி தம்பதிக்கு தொழிலை விரிவுபடுத்த ரூ.60 கோடி கொடுத்தார்.

ஆனால் அந்தப் பணத்தை ராஜ் குந்த்ராவும், அவரது மனைவியும் தங்களது தொழிலை விரிவுபடுத்த பயன்படுத்தாமல் சொந்த தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டனர்.

ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா
ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா

அப்பணத்தைத் திரும்பக் கொடுக்கும்படி தீபக் கோதாரி கேட்டார். ஆனால் ராஜ் குந்த்ரா பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. இதையடுத்து அவர்கள் மீது தீபக் கோதாரி மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணைக்கு ஆஜராகும்படி ராஜ் குந்த்ராவிற்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் ராஜ் குந்த்ரா கடந்த மாதம் போலீஸில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.

இதில் ரூ.60 கோடியில் குறிப்பிட்ட பகுதியை நடிகை பிபாஷா பாசு மற்றும் நேஹா துபியா ஆகியோருக்கு கட்டணமாக கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

5 மணி நேரம் நடந்த விசாரணையில் ராஜ் குந்த்ரா சில முக்கிய கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து போலீஸார் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி ராஜ் குந்த்ராவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா
ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா

நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் இப்போது இம்மோசடி தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸார் ஷில்பா ஷெட்டியின் இல்லத்திற்கு சென்று அவரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வாங்கினர்.

ஷில்பா ஷெட்டியின் விளம்பர கம்பெனி வங்கி கணக்கில் நடந்த பண பரிவர்த்தனைகள் குறித்து கேட்டறிந்தனர். இம்மோசடி தொடர்பாக ஷில்பா ஷெட்டி பல முக்கிய ஆவணங்களை போலீஸாரிடம் கொடுத்துள்ளார். அவற்றை ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ராஜ் குந்த்ராவின் வங்கிக்கணக்கில் இருந்து நடிகை ஷில்பா ஷெட்டி உட்பட 4 நடிகைகளின் வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இம்மோசடியை தொடர்ந்து ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Divorce: ரூ.18 லட்சம் கொடுத்து விவாகரத்து வாங்கிய வாலிபர்; பால் குளியலோடு கேக் வெட்டி கொண்டாட்டம்

வாலிபர் ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடிய கதையைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் விவாகரத்து கிடைத்தவுடன் அவரது தாயார் அவருக்கு பாலாபிஷேக... மேலும் பார்க்க

``இன்ஸ்டாகிராமில்தான் முதல் அறிமுகம்'' - சோபிதாவுடன் மலர்ந்த காதல் நினைவுகளைப் பகிர்ந்த நாகசைதன்யா

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு சமந்தா ... மேலும் பார்க்க

``நான் சிறையில் இருக்க தயாராக இருக்கிறேன்; ஆனால்'' - நீதிபதி மீது செருப்பு வீசிய வழக்கறிஞர்

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது ஷூவை எடுத்து வீசினார். ஆனால் அந்த செருப்பு தலைமை நீதிபதி மீது படவில்லை. சனாதனத்தை அவமதிப... மேலும் பார்க்க

விண்வெளியில் ஓர் வீரர் உயிரிழந்தால் என்ன நடக்கும்? - நாசாவின் ரூல்ஸ் இதுதான்!

மனிதன் விண்வெளிக்கு பயணம் செய்யத் தொடங்கியது முதல் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் திட்டங்கள் வரை விண்வெளிப் பயணங்களுக்கு என சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.ஒருவேளை... மேலும் பார்க்க

15 மனைவிகள்; 30 குழந்தைகள்; விமான நிலையத்தையே வியப்படைய வைத்த தென்னாப்பிரிக்க மன்னர்!àà

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்தில் கடந்த ஜுலை மாதம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் எஸ்வாட்டினி என்ற சிறிய நாடு ஒன்று உள்ளது... மேலும் பார்க்க

300 ஆண்டு பழைமையான ஸ்பானிய கப்பல்; கடலுக்கு அடியில் கிடைத்த ரூ.8 கோடி மதிப்பிலான நாணயங்கள்!

அமெரிக்காவின் ஃபுளோரிடா கடற்கரைக்கு அப்பால், 30 ஆண்டுகள் பழைமையான ஸ்பானிஷ் கப்பல் சிதைவிலிருந்து சுமார் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி) மதிப்புள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்கம் மற்... மேலும் பார்க்க