செய்திகள் :

15 மனைவிகள்; 30 குழந்தைகள்; விமான நிலையத்தையே வியப்படைய வைத்த தென்னாப்பிரிக்க மன்னர்!àà

post image

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்தில் கடந்த ஜுலை மாதம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் எஸ்வாட்டினி என்ற சிறிய நாடு ஒன்று உள்ளது.

1986 முதல் இந்த நாட்டை மூன்றாம் எம்ஸ்வாதி என்ற மன்னர் ஆட்சி செய்து வருகிறார்.

உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவராக இருக்கும் இவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.

இவர் ஒரு முறை எஸ்வாட்டினி நாட்டில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.

அப்போது பாரம்பரிய உடையுடன் எம்ஸ்வாதி மன்னர் அவரின் 15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 வேலையாட்களுடன் விமானத்தில் இருந்து இறங்கி இருக்கிறார்.

இதனை அங்கிருக்கும் விமான நிலைய ஊழியர்கள் கண்டு வியந்திருக்கிறார்கள்.

இதுதொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கத்துடன் தான் அவர் அபுதாபி சென்றிருக்கிறார்.

ஆனால், அவரது வாழ்க்கை முறை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மூன்றாம் எம்ஸ்வாதி மன்னரின் தந்தை, 70-க்கும் மேற்பட்ட மனைவிகளையும், 210 குழந்தைகளையும், 1000-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளையும் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

விண்வெளியில் ஓர் வீரர் உயிரிழந்தால் என்ன நடக்கும்? - நாசாவின் ரூல்ஸ் இதுதான்!

மனிதன் விண்வெளிக்கு பயணம் செய்யத் தொடங்கியது முதல் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் திட்டங்கள் வரை விண்வெளிப் பயணங்களுக்கு என சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.ஒருவேளை... மேலும் பார்க்க

300 ஆண்டு பழைமையான ஸ்பானிய கப்பல்; கடலுக்கு அடியில் கிடைத்த ரூ.8 கோடி மதிப்பிலான நாணயங்கள்!

அமெரிக்காவின் ஃபுளோரிடா கடற்கரைக்கு அப்பால், 30 ஆண்டுகள் பழைமையான ஸ்பானிஷ் கப்பல் சிதைவிலிருந்து சுமார் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி) மதிப்புள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்கம் மற்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியைத் தொடர்ந்து கும்பிட்ட நிதீஷ் குமார்: `அவருக்கு என்ன ஆச்சு?' - எதிர்க்கட்சிகள் கேள்வி

பீகாரில் அடுத்த ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் அவசர அவசரமாக நலத்திட்ட உதவிகளை அறிவித்த... மேலும் பார்க்க

இருமல் மருந்து: சிரப் எச்சரிக்கை முதல் மருந்தில்லா தீர்வுகள் வரை மருத்துவர் விளக்கம்

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள், சில நாட்களில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது, இந்திய அளவில் பெற்றோர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

அமெரிக்கா: ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்கி பருகும் பாடி பில்டர்கள் - என்ன காரணம் தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த சில தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் போக மீதி இருக்கும் பாலை ஆன்லைனில் தளங்களில் விற்று டாலர்களில் சம்பாதித்து வருகின்றனர். தாய்ப்பால் விற்பனை செய்து ஒரே நாளில்... மேலும் பார்க்க

கோன்பனேகா குரோர்பதி: 7 ஆண்டுக்கால முயற்சி; யூடியூப் மூலம் படித்து ரூ.50 லட்சம் வென்ற விவசாயி!

நடிகர் அமிதாப்பச்சன் நடத்தும் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகும். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமானோர் லட்சாதிபதியாகி இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதில் பங்கெடுத்து கோடீஸ்வரராகி இருக்க... மேலும் பார்க்க