செய்திகள் :

Kantara: "தர்மத்தையும் துளு நாட்டின் கலாச்சாரத்தையும் சேர்த்துள்ளார் ரிஷப் ஷெட்டி" - அண்ணாமலை ரிவ்யூ

post image

இந்தியா முழுவதும் ஹிட் ஆகியிருக்கும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இன்று சமூக வலைதளத்தில் முக்கிய பேசுபொருளாக இருக்கிறது. விமர்சகர்கள், ரசிகர்கள், திரையுலகினரைக் கடந்து பல துறைகளைச் சேர்ந்தவர்கள் படக்குழுவை வாழ்த்தியுள்ளனர்.

Kantara Chapter 1
Kantara Chapter 1

Kantara Capter 1 - அண்ணாமலை ரிவியூ

அந்தவகையில் முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "காந்தாரா சாப்டர் 1 படத்தைப் பார்த்தேன். நம்பிக்கை மற்றும் நாட்டுப்புற கதைகளின் வியக்கவைக்கும் கலவை. நடிகராகவும் இயக்குநராகவும் ரிஷப் ஷெட்டி பிரகாசமான பங்களிப்பைச் செய்துள்ளார், தர்மத்தையும் துளு நாட்டின் கலாச்சாரத்தையும் ஒன்றாக சேர்த்துள்ளார், பஞ்சுருளி தெய்வம் மற்றும் குலிகா வழிபாட்டுடன் அவர்களின் பல்வேறு வெளிப்பாடுகளைக் காட்டியிருக்கிறார்.

பிரபஞ்சத்தை நிலையாக வைத்திருக்கும் மற்றும் அதை எப்போதும் தர்மத்தின் பாதைக்குக் கொண்டுவரும் பஞ்ச பூதத்தின் நித்தியமான மற்றும் நுட்பமான சமநிலை தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் வியக்கவைக்கும் வகையில் நேர்த்தியாக, உலகத்தரமான தயாரிப்பையும் VFX-ஐயும் காட்டுகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

நான் குடிமைப் பணியாளராக (IAS) பணியாற்றியபோது இந்த ஆழமாக வேரூன்றிய பாரம்பரியத்தை நேரில் கண்டிருக்கிறேன், இந்தபடம் ஒரு ஆன்மீக மறுவருகை போலவும் நினைவின் பாதையில் நடந்து சென்றது போலவும் இருந்தது.

நமது திரைப்படங்கள் எல்லாம் Woke culture-இன் ஆதிக்கத்திலிருக்கும்போது, ஹோம்பலே ஃபிலிம்ஸ் மீண்டும் பாரதத்தின் ஆன்மாவை வெளிச்சமிட்டுக் காட்டியதற்கு பாராட்டுகள்." எனக் கூறியுள்ளார்.

அண்ணாமலையின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

கமல் ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன், கரூர் த.வெ.க பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது செய்தி... மேலும் பார்க்க

நீதிபதி கவாய் மீது தாக்குதல்: "இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது" - ஸ்டாலின் கண்டனம்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற அந்த நபர், "சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறு... மேலும் பார்க்க

'கரூர் வழக்கில் விஜய்யை குற்றவாளி ஆக்குவதா? தவெகவை திமுக நசுக்க பார்க்கிறது' - அண்ணாமலை

பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரூர் விவகாரத்தில்சமூக வலைதளங்களில் நீதிபதியை விமர்சிப்பது துரதிஷ்டவசமானது. நீதிபதி குறித்து... மேலும் பார்க்க

``இது தவறோ, அலட்சியமோ அல்ல; பெரும் அரசியல் குற்றச்செயல்" -காங்கிரஸ் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 22.7 லட்சம் மக்களின் பெயர்களைத் திட்டமிட்டு நீக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2020 தேர்தலின்போது காங்கிரஸ் நெர... மேலும் பார்க்க

``சினிமா கவர்ச்சி போல வாக்குறுதி; ஏமாற்றுவது, திமுகவுக்கு கைவந்த கலை'' - செல்லூர் ராஜூ காட்டம்

"என் தந்தை அறிவுஜீவி, முதல்வர் பதவியேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவார் என இப்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அப்போது பேசினார், ஆனால் ஒன்றுமே செய்யவில்லை." என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ... மேலும் பார்க்க

500 ஆண்டுகளாக நடக்கும் துர்கா பூஜை: கலவரக் காடாக மாறிய ஒடிசா நகரம்; இணைய முடக்கம் - என்ன நடந்தது?

துர்கா பூஜை ஊர்வலம்24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இருந்து வந்த நிலையில், 2024-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதனையடுத்து மோகன் சரண் மாஜி தலைமையில், ஒடிச... மேலும் பார்க்க