செய்திகள் :

அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பி கொலை -கந்துவட்டி தொழில் செய்த பாஜக பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது!

post image

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் பா.ஜ.க-வின் ஒன்றிய செயலாளர். கந்துவட்டி தொழில் செய்து வந்த இவரிடம் நடுவிக்கோட்டையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் சக்திவேல் வட்டியுடன் கடனை சரியாக திருப்பி தரவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் ராஜேஷ்குமார் கடனை திருப்பி கேட்டு அழுத்தம் கொடுத்து மிரட்டி வந்துள்ளார். இதனால் சக்திவேல் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ராஜேஷ்குமார்

இந்த நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி, ராஜேஷ்குமார், சக்திவேல் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சக்திவேல் வீட்டில் இல்லை. அவரது தம்பி பிரகதீஷ் இருந்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி தரவில்லை என்றால் புல்டோசர் வைத்து வீட்டை இடித்து தள்ளிடுவேன் என ராஜேஷ்குமார் மிரட்டியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஷ்குமார், பிரகதீஷை வெட்டி சாய்க்க சம்பவ இடத்திலேயே பிரகதீஷ் உயிரிழந்தார். அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவரின் வீட்டை சோதனை செய்ததில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்ததில் 29 டூவீலர், 3 நான்கு சக்கர வாகனம் மற்றும் 75 ஆவணங்கள் ஆகியவற்றை பணம் பெற்றவர்களிடம் இருந்து வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இதன் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதையடுத்து தற்போது ராஜேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் போலீஸார் சிறையில் அடைத்தனர்.

கரூர்: 'உடல் பிரச்னையை தீர்க்கிறேன்' - இளம்பெண்ணிடம் ரூ. 5.50 லட்சம் ஏமாற்றிய போலி சாமியார் கைது!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தெப்பக்குளம் தெருவில் உள்ள கருப்பசாமி கோயிலில் கடவூர் தாலுகா, கரிச்சிப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (வயது: 38) என்பவர் பொது மக்களுக்கு குறி சொல்லி வேண்டுதல்களை நிறை... மேலும் பார்க்க

விருதுநகர்: குடும்பப் பிரச்னை; மாமியாரை கிணற்றில் தள்ளிய மருமகன் - போலீஸ் விசாரணை!

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள துய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் மாரிமுத்து. இவர் மானூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த வீரேஷ் இருளாயி தம்பதியினரின் மகளான சத்யாவை திருமணம் செய்து கொண்டா... மேலும் பார்க்க

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; காயங்களுடன் கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள்!

கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குவதும், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்து செல்வதும் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக நாகப்பட்டினம் மீனவர்கள் க... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: `பட்டியலின மக்கள் 13 பேர் உயிரிழப்பு' - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு

கரூர், வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி த.வெ.க கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பலரும் பாதிக்கப்பட்டவர்களின... மேலும் பார்க்க

தூத்துக்குடி : பள்ளி சிறுமி கர்ப்பம்; போக்சோவில் பள்ளி ஆசிரியர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி என்ற கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இதே மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான மணிகண்டன் என்பவர், கணித ஆசிரியராக பணிபுரிகிறார். இதே பள்... மேலும் பார்க்க

அயர்ன் பாக்ஸில் மின்கசிவு; சப்-இன்ஸ்பெக்டர் பரிதாப உயிரிழப்பு - புதுக்கோட்டையில் சோகம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வந்தவர் லட்சுமிபிரியா. இவர், அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்த சக்திமுருகன் என்பவரது மனைவி. 33 வயது நிரம்பிய இவர... மேலும் பார்க்க