செய்திகள் :

அயர்ன் பாக்ஸில் மின்கசிவு; சப்-இன்ஸ்பெக்டர் பரிதாப உயிரிழப்பு - புதுக்கோட்டையில் சோகம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வந்தவர் லட்சுமிபிரியா. இவர், அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்த சக்திமுருகன் என்பவரது மனைவி.

33 வயது நிரம்பிய இவர் கடந்த 2016-ம் வருடம் சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்தார்.

2025-ம் ஆண்டு மணமேல்குடி காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராகப் பணிமாறுதலில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், இவர் மணமேல்குடி வடக்கூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த சூழலில், காலாண்டு விடுமுறைக்கு குழந்தைகளைத் தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு அவர் மட்டும் தனியே இருந்துள்ளார்.

மணமேல்குடி காவல்நிலையத்தில் பகல் வேலைகளை முடித்துவிட்டு இரவு வீட்டிற்குச் சென்றுவிட்டு மீண்டும் நேற்று காலை பணிக்குச் செல்ல தனது காவல் சீருடையை அயர்ன் செய்துள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்சாரம் அயர்ன் பாக்ஸ் மூலம் லட்சுமி பிரியாவைத் தாக்கி உள்ளது. இதில், வீட்டில் யாரும் இல்லாததால் காப்பாற்ற முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரியா
சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரியா

காலை 8 மணிக்கு மணமேல்குடி காவல் நிலையத்திற்கு வேலைக்கு வராததால் மேலும் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டும் எடுக்காததால் சக காவலர்கள் வீட்டிற்கு சென்று பூட்டிருந்த கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, மின்சாரம் தாக்கி லட்சுமிப்ரியா இறந்தகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே தகவலறிந்து வந்த கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி தலைமையிலான போலீஸார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சப் -இன்ஸ்பெக்டர் இறப்பு குறித்து மணமேல்குடி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதோடு, இறந்த சப் -இன்ஸ்பெக்டருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் சக காவலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி : பள்ளி சிறுமி கர்ப்பம்; போக்சோவில் பள்ளி ஆசிரியர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி என்ற கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இதே மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான மணிகண்டன் என்பவர், கணித ஆசிரியராக பணிபுரிகிறார். இதே பள்... மேலும் பார்க்க

முன்பகை; வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கொலை - குளித்தலையில் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நெய்தலூர் ஊராட்சி பெரிய பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது: 29). ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். இவர், திருச்சி மாவட்டம், கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

`மூலிகை தேயிலை' - வெளிநாட்டிலிருந்து தபால் மூலம் கஞ்சாவை கடத்தல்; சிக்கிய மும்பை போலீஸ்காரர்!

மும்பைக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தி வரப்படுகிறது. சில பொருட்கள் தபால் மூலம் கடத்தப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வந்த பார்சல்களை மும்பை விமான நிலையத்தில் ச... மேலும் பார்க்க

பெண் வாடிக்கையாளர் மீது பாலியல் சீண்டல்; வைரல் வீடியோவால் பரபரப்பு

பிரபல மளிகைப் பொருள் டெலிவரி நிறுவனமான பிளிங்கிட்டின் (Blinkit) டெலிவரி ஊழியர் ஒருவர், டெலிவரியின் போது தன்னைத் தகாத முறையில் தொட்டதாக ஒரு பெண் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.இந்தச் சம்... மேலும் பார்க்க

கரூர் 41 பலியான சம்பவம்: விசாரணையைத் தொடங்கிய ஐ.ஜி அஸ்ரா கார்க்

கடந்த 27 -ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம், இந்தியாவையே கலங்கடித்தது. இந்த ... மேலும் பார்க்க

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; 3 மணி நேரம் பலத்த சோதனை

புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தருகின்றனர்.தற்போது விடுமுறை நாள் என்பதாலும் இன்று பிரதோஷம் என்பதாலும் காலையிலிருந்த... மேலும் பார்க்க