செய்திகள் :

`மூலிகை தேயிலை' - வெளிநாட்டிலிருந்து தபால் மூலம் கஞ்சாவை கடத்தல்; சிக்கிய மும்பை போலீஸ்காரர்!

post image

மும்பைக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தி வரப்படுகிறது. சில பொருட்கள் தபால் மூலம் கடத்தப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வந்த பார்சல்களை மும்பை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அது போன்று வந்த பார்சல்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது அதில் ஒரு பார்சலில் மூலிகை தேயிலை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் சந்தேகம் அடைந்த சுங்க வரித்துறை அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்துப் பார்த்தனர். அதில் பச்சை இலை இருந்தது. அதனை சோதித்து பார்த்தபோது அது கஞ்சா என்று தெரியவந்தது.

அந்த பார்சல் அங்குஷ் பண்டாரி என்பவருக்கு வந்திருந்தது. அதுவும் தபால் பார்சல் மூலம் வந்திருந்தது. அந்த பார்சலுக்குரிய நபரை பிடிக்க முடிவு செய்த சிறப்பு புலனாய்வு மற்றும் விசாரணை அதிகாரிகள் அங்குஷ் பண்டாரி இருக்கும் பகுதியில் வேலை செய்யும் தபால்காரர் உதவியை நாடினர்.

அவர் உதவியுடன் பண்டாரியை பிடிக்க முடிவு செய்தனர். தபால்காரரிடம் பார்சாலை கொடுத்து பண்டாரிக்கு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். தபால்காரர் பண்டாரிக்கு போன் செய்து தபால் வந்திருப்பதாக தெரிவித்தார்.

உடனே பண்டாரி பார்சலை வாங்க வந்தார். அவரை சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழுவினர் பிடித்து கைது செய்தனர். பண்டாரி மும்பையில் போலீஸ்காரராக வேலை செய்வது விசாரணையில் தெரிய வந்தது. அந்த பார்சல் குறித்து கேட்டதற்கு அதனை அவரது நண்பர் நிஹால் ஆர்டர் செய்ததாக குறிப்பிட்டார். இதையடுத்து பண்டாரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு கோர்ட் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. அவரது நண்பர் நிஹாலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிஹால் டிராவல் ஏஜென்சி நடத்துவதாக தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி : பள்ளி சிறுமி கர்ப்பம்; போக்சோவில் பள்ளி ஆசிரியர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி என்ற கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இதே மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான மணிகண்டன் என்பவர், கணித ஆசிரியராக பணிபுரிகிறார். இதே பள்... மேலும் பார்க்க

அயர்ன் பாக்ஸில் மின்கசிவு; சப்-இன்ஸ்பெக்டர் பரிதாப உயிரிழப்பு - புதுக்கோட்டையில் சோகம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வந்தவர் லட்சுமிபிரியா. இவர், அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்த சக்திமுருகன் என்பவரது மனைவி. 33 வயது நிரம்பிய இவர... மேலும் பார்க்க

முன்பகை; வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கொலை - குளித்தலையில் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நெய்தலூர் ஊராட்சி பெரிய பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது: 29). ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். இவர், திருச்சி மாவட்டம், கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

பெண் வாடிக்கையாளர் மீது பாலியல் சீண்டல்; வைரல் வீடியோவால் பரபரப்பு

பிரபல மளிகைப் பொருள் டெலிவரி நிறுவனமான பிளிங்கிட்டின் (Blinkit) டெலிவரி ஊழியர் ஒருவர், டெலிவரியின் போது தன்னைத் தகாத முறையில் தொட்டதாக ஒரு பெண் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.இந்தச் சம்... மேலும் பார்க்க

கரூர் 41 பலியான சம்பவம்: விசாரணையைத் தொடங்கிய ஐ.ஜி அஸ்ரா கார்க்

கடந்த 27 -ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம், இந்தியாவையே கலங்கடித்தது. இந்த ... மேலும் பார்க்க

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; 3 மணி நேரம் பலத்த சோதனை

புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தருகின்றனர்.தற்போது விடுமுறை நாள் என்பதாலும் இன்று பிரதோஷம் என்பதாலும் காலையிலிருந்த... மேலும் பார்க்க