செய்திகள் :

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; 3 மணி நேரம் பலத்த சோதனை

post image

புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தருகின்றனர்.

தற்போது விடுமுறை நாள் என்பதாலும் இன்று பிரதோஷம் என்பதாலும் காலையிலிருந்து மக்கள் அதிக அளவில் வருகை தந்தனர்.

மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனை
மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனை

இந்நிலையில் நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு ஈமெயில் மூலமாக மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து மதுரை மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள அம்மன், சுவாமி சன்னதிகள், தங்கக் கொடிமரம், அன்னதானம் வழங்குமிடம், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பின்னர் கோயிலின் நான்கு கோபுர நுழைவாயில் பகுதிகளிலும், பக்தர்கள் செல்லக்கூடிய பகுதிகள், செல்போன் வைக்கும் இடம், கோயிலுக்கு முன்பாக உள்ள தேங்காய் பழம் விற்பனை செய்யுமிடம், பக்தர்கள் காலணிகள் வைக்கும் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்திலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் பலத்த சோதனையில் ஈடுபட்டனர்.

மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனை
மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனை

3 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் எந்த வெடி பொருட்களும் கண்டறியப்படாத நிலையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த செய்தி புரளி என தெரியவந்தது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினருக்கு கூடுதல் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூர்: பாலியல் தொழிலாளர்களை துன்புறுத்தி, பணப் பறிப்பு; 2 இந்தியர்களுக்கு பிரம்படி, சிறை!

விடுமுறை காரணமாக சிங்கப்பூர் சென்றிருந்தபோது அங்கு ஹோட்டல் அறைகளில் இரண்டு பாலியல் தொழிலாளர்களை வற்புறுத்தி தவறாக நடந்து கொண்டு, கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஆண்களுக... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் அஸ்ஸாம் பாடகர் விஷம் கொடுத்து கொலையா? - அதிர்ச்சி வாக்குமூலம்; இருவர் கைது!

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஜுபீன் கார்க் தலைமையிலான இசைக்குழு கடந்த மாதம் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான 60 ஆண்டு தூதரக உறவை கொண்டாட சிங்கப்பூர் சென்று இருந்தது. இப்பயணத்தின் போது ஜுபீன் கார்க் ம... மேலும் பார்க்க

மபி, ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த 12 குழந்தைகள் மரணம்; சர்ச்சைக்குரிய மருந்துகளுக்குத் தடை

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2 வயதுக்கு உட்பட்ட இக்குழந்தைகள் இருமலுக்கு மருந்து குடித்த சில நாட்களில் சிறுந... மேலும் பார்க்க

திருமணத்திற்கு மறுத்த காதலன்; கணவன் துணையோடு கொலை செய்த பெண் சாமியார்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் பகுதியைச் சேர்ந்தவர் பூஜா பாண்டே. இந்து மகாசபை தலைவராக இருக்கிறார். தன்னை ஆன்மிகத் தலைவராக காட்டிக்கொள்ளும் பூஜா பாண்டேக்கு ஏற்கனவே திருமணமாகி அசோக் பாண்டே என்ற கணவர் இருக... மேலும் பார்க்க

NCRB: `வேலையில்லா திண்டாட்டம் உயிரிழப்பு; போக்சோ வழக்கு' - கவலையளிக்கும் 2023 அறிக்கை

தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகம் (NCRB) அறிக்கை'வேலையில்லாத காரணத்தால் கடந்த 2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 14, 234 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 15.4 சதவிகிதம் பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்' என்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையை உலுக்கிய இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான 2 காவலர்களும் `டிஸ்மிஸ்’!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் தனது வளர்ப்புத் தாயுடன் கடந்த 29-9-2025 அன்று இரவு காளஹஸ்தியில் இருந்து வாழைத்தார் ஏற்றிவந்த மினி வேனில் திருவண்ணாமலை மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறார். காய... மேலும் பார்க்க