செய்திகள் :

மபி, ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த 12 குழந்தைகள் மரணம்; சர்ச்சைக்குரிய மருந்துகளுக்குத் தடை

post image

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2 வயதுக்கு உட்பட்ட இக்குழந்தைகள் இருமலுக்கு மருந்து குடித்த சில நாட்களில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறப்பது தெரிய வந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் 9 குழந்தைகள் இதே பிரச்னையால் உயிரிழந்துள்ளனர். இது தவிர மேலும் 5 குழந்தைகள் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் உயிரிழப்பு நடந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் இருமல் மருந்தின் 19 மாதிரிகள் எடுத்துச்செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் சிறுநீரக பாதிப்புக்குக் காரணமான diethylene glycol மற்றும் ethylene glycol போன்ற நச்சுப்பொருட்கள் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

தற்போது 9 மாதிரிகளின் முடிவுகள் மட்டுமே வந்திருக்கின்றன. 10 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு இருமல் மருந்துகளுக்கு மாநில அரசு தடை விதித்து இருக்கிறது.

இருமல் மருந்து
இருமல் மருந்து

ராஜஸ்தானிலும் அரசின் இலவச மருத்துவ முகாமில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறந்த குழந்தைகள் அனைவருமே இருமல் மருந்து குடித்ததாக அவர்களது பெற்றோர் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானிலும் சர்ச்சைக்குரிய மருந்துகளின் மாதிரிகள் எடுத்துச்செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் எந்தவித நச்சுத்தன்மையும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே இருமல் மருந்தில் சர்ச்சை ஏற்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டில் Coldrif என்ற இருமல் மருந்துக்கு மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி மருந்து மாதிரிகளை எடுத்துச்சென்றுள்ளனர்.

சிங்கப்பூரில் அஸ்ஸாம் பாடகர் விஷம் கொடுத்து கொலையா? - அதிர்ச்சி வாக்குமூலம்; இருவர் கைது!

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஜுபீன் கார்க் தலைமையிலான இசைக்குழு கடந்த மாதம் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான 60 ஆண்டு தூதரக உறவை கொண்டாட சிங்கப்பூர் சென்று இருந்தது. இப்பயணத்தின் போது ஜுபீன் கார்க் ம... மேலும் பார்க்க

திருமணத்திற்கு மறுத்த காதலன்; கணவன் துணையோடு கொலை செய்த பெண் சாமியார்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் பகுதியைச் சேர்ந்தவர் பூஜா பாண்டே. இந்து மகாசபை தலைவராக இருக்கிறார். தன்னை ஆன்மிகத் தலைவராக காட்டிக்கொள்ளும் பூஜா பாண்டேக்கு ஏற்கனவே திருமணமாகி அசோக் பாண்டே என்ற கணவர் இருக... மேலும் பார்க்க

NCRB: `வேலையில்லா திண்டாட்டம் உயிரிழப்பு; போக்சோ வழக்கு' - கவலையளிக்கும் 2023 அறிக்கை

தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகம் (NCRB) அறிக்கை'வேலையில்லாத காரணத்தால் கடந்த 2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 14, 234 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 15.4 சதவிகிதம் பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்' என்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையை உலுக்கிய இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான 2 காவலர்களும் `டிஸ்மிஸ்’!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் தனது வளர்ப்புத் தாயுடன் கடந்த 29-9-2025 அன்று இரவு காளஹஸ்தியில் இருந்து வாழைத்தார் ஏற்றிவந்த மினி வேனில் திருவண்ணாமலை மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறார். காய... மேலும் பார்க்க

பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட யூடியூபர்; விகடன் புகாரால் அதிரடி கைது! | முழு விவரம்

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், "பெண் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பதால் பெற்றோர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.எனவே, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து பார்க்கும் உரிம... மேலும் பார்க்க

தேனி: அரசுப் பள்ளியில் புத்தகங்கள் திருட்டு; அதிர்ச்சி வீடியோ... ஆசிரியர் பணியிடை நீக்கம்!

தேனி, பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தகங்களை ஆசிரியர்களே யாருக்கும் தெரியாமல் மர்ம நபர்களுக்கு வண்டிகளில் ஏற்றி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இத... மேலும் பார்க்க