செய்திகள் :

"மணிப்பூர் வேறு கரூர் வேறு; விஜய் மன்னிப்புக் கேட்ட பிறகும் பிரச்னை ஏன்?" - குஷ்பு பேட்டி

post image

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது. பாஜக எம்.பிக்களின் விசாரணைக் குழுவும் தனியாக பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்திருந்தனர்.

இதற்கிடையில் அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் - நடிகர் விஜய்

சமீபத்தில் இராமநாதபுரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மணிப்பூர் கலவரத்தின்போது அங்கு உடனே செல்லாத பாஜக விசாரணைக் குழு, கரூருக்கு மட்டும் உடனே அனுப்பி வைக்கப்பட்டது ஏன்?" என்று கேள்வி எழுப்பி விமர்சித்துப் பேசியிருந்தார். இது விவாதப்பொருளாக வெடித்த நிலையில் இதற்கு பாஜகவினர் பதிலளித்து வருகின்றனர்.

அவ்வகையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் பாஜக மாநிலத் துணை தலைவர் குஷ்பு, "மணிப்பூர் வேறு கரூர் வேறு. இரண்டையும் ஒப்பிட்டுப் பேச முடியாது. மணிப்பூரில் நடந்தது எல்லைப் பிரச்னை. மணிப்பூரில் நடந்த கொடூரத்திற்காக நானே தலைகுனிந்து நிற்கிறேன். ஆனால், கரூர் பிரச்னை என்பது முற்றிலும் வேறு. தனிப்பட்ட அரசியல் தாக்குதலுக்காக இரண்டையும் ஒப்பிட்டு பேசுவது முட்டாள்தனம்.

குஷ்பு

விஜய் அவர்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அரசு SIT மூலமே விசாரணை நடத்துகிறது. விஜய் மன்னிப்புக் கேட்டுவிட்டார், சம்பவ இடத்திற்குச் செல்வதில் இருக்கும் சிக்கல்களையும் எடுத்துச் சொல்லிவிட்டார். 2 நிமிடத்தில் நூடுல்ஸ் செய்வதைப் போல எல்லாத்தையும் செய்து தீர்வு கொடுக்க முடியாது. இந்த விஷயத்தில் விசாரணைக் குழுவின் அறிக்கைக்குப் பிறகே எதுவும் பேசமுடியும்.

இந்த கரூர் சம்பவத்தில் முதல்வரிடம், இந்த திமுக அரசிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் இருக்கின்றன. ஆனால், ஏன் என்று கேள்வி கேட்டாலே முதல்வர் ஸ்டாலின் காதில் பஞ்சை வைத்து 'Mute mode'க்குச் சென்றுவிடுகிறார்" என்று பேசியிருக்கிறார்.

"முதல்வர் ஸ்டாலின் பொறுப்போடு செயல்பட்டார்; பழிதீர்க்கும் நோக்கமில்லை; ஆனால் விஜய்" - டிடிவி தினகரன்

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அற... மேலும் பார்க்க

"விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம்” - சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு, மாடுகள், மரங்களின்மாநாடுகளை தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு, தஞ்சையில் தண்ணீரின் மாநாடு, தர்மபுரியில் மலைகளின் மாநாடு நடத்தப்போவதாகத் த... மேலும் பார்க்க

ST பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியில் தனி கவனம் தேவை; கேரள அரசின் முன்னெடுப்பு !

கேரள அரசு, அரசுப் பள்ளி மாணவர்களின் வருகையை, கல்வி விவரங்கள், புகார்களை பதிவு செய்ய 'Sampoorna Plus' எனும் செயலியை செயல்படுத்தி வருகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பே கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளர்ச்... மேலும் பார்க்க

'Drone-கள் விமானப்படையின் எதிர்காலமா?' - எலான் மஸ்கின் கருத்திற்கு இந்திய விமானப்படைத் தளபதி பதில்

சமீபத்தில் ஸ்டார்லிங்க், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க், வான்வெளி ராணுவத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்துப் பேசியிருந்தார்.மேலும், ராணுவ பைலட்டுகள் ஓட்டும் போர் விமானத்தை விடவும... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: "பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல" - பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952ல் தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டு அப்பகுதி மக்களின் தொடக்கக் கால கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டு வந்தது.மீண்டும் இப்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கு நிரந்தர DGP நியமனம் எப்போது? தொடரும் இழுபறி; UPSC கூட்டத்தில் நடந்தது என்ன?

தமிழகக் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்காகக் கடும் போட்டி நிலவும். ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட சீனியர் டி.ஜி.பி-க்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். தி.மு.க ஆட்சிக்கு வேண்டப்பட்ட ச... மேலும் பார்க்க