செய்திகள் :

பேயை விரட்டி சான்றிதழ் தரும் வினோத தொழில் - ஜப்பானில் பிரபலமாகி வரும் புதிய பிசினஸ்!

post image

ஜப்பானில் புது வீடு வாங்குவதற்கு முன்பு அங்கு மற்ற வசதிகளை பரிசோதிப்பதற்கு முன்பு பேய் ஓட்டும் சடங்கு கட்டாயமாகி வருகிறது.

பொதுவாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும்போது அல்லது வாங்கும் போது அதன் வசதி, பாதுகாப்பு, பக்கத்தில் ஏதேனும் கடைகள் இருக்கிறதா என்பதை பற்றி விசாரிப்போம். ஆனால் ஜப்பானில் ஒரு வினோத நடைமுறை பின்பற்றபட்டு வருகிறது.

அதாவது வாங்கவிருக்கும் வீட்டில் அமானுஷ்ய சக்திகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்த பின்னர் அந்த வீட்டை வாங்குகின்றனர்.

Japan Property Exorcism

அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக நம்பப்படும் வீடுகள் குறைந்த விலையில் கிடைப்பதால் மக்கள் அதனை வாங்க விரும்புகின்றனர். அப்படி ஏதேனும் அமானுஷ்ய சக்தி இருந்தால் அதற்கென சடங்குகளை செய்த பின்னர் அந்த வீட்டை வாங்குகின்றனர்.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, இவ்வாறு எதிர்மறையான வைப்ரேஷன் இருக்கும் வீடுகளை விற்கும் போது அதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறையின் சட்டம் சொல்கிறது. இவ்வாறு வெளிப்படை தன்மையுடன் விற்கப்படும் வீடுகளின் விலை மார்க்கெட் விலையை விட 10 முதல் 20 சதவீதம் வரை குறைவாக இருக்குமாம். இதனால் மக்கள் அதனை வாங்க விரும்புகின்றனர்.

இதையே ஒரு தொழிலாக மாற்றியுள்ளது ஒரு நிறுவனம். ஜப்பானிய நிறுவனமான கச்சிமோட், 196க்கும் மேற்பட்ட பேய் சொத்துக்களை ஆய்வு செய்துள்ளது. பேய் இருப்பதாக சந்தேகப்படும் வீடுகளை ஆய்வு செய்து வருகிறது இந்த நிறுவனம்.

ஆய்வு முடிந்ததும் அந்த நிறுவனம் எந்த அமானுஷ்ய நிகழ்வுகளும் இல்லை என்பதை உறுதி செய்து அதற்கான சான்றிதழையும் குத்தகைக்காரர்களிடம் வழங்குகிறது.

இந்த தனித்துவமான சேவைக்கு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வரை வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. உயர்ந்து வரும் சொத்து விலைகள் காரணமாக குறைந்த விலையில் கிடைக்கும் இந்த வீட்டை வாங்குவதற்கு சில முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Black Swan: இங்கிலாந்திலுள்ள நகரத்தை விட்டு விரட்டியடிக்கப்படும் அன்னப் பறவை; என்ன காரணம் தெரியுமா?

இங்கிலாந்தின் முக்கிய நகரில் சுற்றித் திரிந்த கருப்பு நிற அன்னப்பறவையை அந்த நகரத்தை விட்டு வெளியேற்ற உள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.இங்கிலாந்தின் ஸ்ட்ராட்ஃபோர்ட்-... மேலும் பார்க்க

ஏர்போர்ட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கடிகாரம்; நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்- பின்னணி என்ன?

டெல்லி விமான நிலையத்தில் துபாயைச் சேர்த்த பயணி ஒருவர் அணிந்திருந்த விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ”இது வணிக நோக்கம் கொண்டது” என சுங்க அதிகாரிகள் இதற்குக்... மேலும் பார்க்க

ஆழ்கடலுக்குள் உயிருக்குப் போராடிய நீச்சல் வீரர்; ஆப்பிள் வாட்ச்சால் உயிர் தப்பியது எப்படி?

மும்பையில் சமீபத்தில் கூகுள் காட்டிய வழியைப் பின் பற்றிச் சென்ற ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கடலுக்குள் விழுந்து உயிரிழந்தனர். பெண் காரில் சென்று நேரடியாகச் சென்று கடலுக்குள் விழுந்தார். மற்றொரு நபர் பை... மேலும் பார்க்க

``எலுமிச்சை, பூஜை இல்லாமல் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் இல்லை'' - டெஸ்லா கார் வாங்கியவர் பதிவு வைரல்

எந்த ஒரு புதிய வாகனம் விலைக்கு வாங்கினாலும் அதனை உடனே கோயிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. பழைய வண்டியை விலைக்கு வாங்கினாலும் அதற்கு ஒரு பூஜை செய்யாமல் இருப்பது கிடையாது... மேலும் பார்க்க

சம்பள வாக்காளர்களை உருவாக்கும் மோடி; மும்பையை அதானியிடம் பா.ஜ.க கொடுத்துவிடும் என தாக்கரே எச்சரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் தசராவையொட்டி மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே மும்பை தாதரில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். பால் தாக்கரே இறந்த பிறகு அதனை உத்தவ் தாக்கரே ஒவ்வொரு ஆண்ட... மேலும் பார்க்க

மும்பையில் இரவு வாழ்க்கை ஆரம்பம்; மகா.வில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இரவில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கூடுதல் நேரம் திறந்... மேலும் பார்க்க