செய்திகள் :

ஏர்போர்ட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கடிகாரம்; நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்- பின்னணி என்ன?

post image

டெல்லி விமான நிலையத்தில் துபாயைச் சேர்த்த பயணி ஒருவர் அணிந்திருந்த விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

”இது வணிக நோக்கம் கொண்டது” என சுங்க அதிகாரிகள் இதற்குக் கூறிய காரணத்தை எதிர்த்து சம்பந்தப்பட்ட நபர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் எதற்கு தீர்ப்பும் வழங்கியிருக்கிறது.

என்ன நடந்தது?

துபாயில் வசிக்கும் இந்தியரான மகேஷ் மல்கானி என்பவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த ரூ.13.48 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்தப் பொருள் பற்றிய உரிய அறிவிப்பு கொடுக்கவில்லை என்பதுதான் இதற்குக் காரணமாக அவர்கள் கூறியுள்ளனர்.

பறிமுதல் செய்ததோடு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மீட்பு அபராதம் செலுத்தி அந்த கடிகாரத்தை மீண்டும் ஏற்றுமதி செய்ய சுங்கத்துறை அதிகாரிகளால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக அந்த உத்தரவின் இந்த கைக்கடிகாரம் ”வணிக நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இருக்க வாய்ப்பில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மகேஷ் வணிக நோக்கம் என்ற வார்த்தையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒரே ஒரு ரோலக்ஸ் கடிகாரத்தை வணிக அளவு எனக் கருதமுடியாது. தனிப்பட்ட பயன்பாட்டிற்கு வாய்ப்பு இல்லை என கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கூறியிருக்கிறது.

இந்த கடிகாரத்தை மீட்பதற்கான அபராதத் தொகையை செலுத்தி கடிகாரத்தை மீட்டுக் கொள்ளலாம் என நீதிமன்றம் காலக்கெடு வழங்கியுள்ளது.

பேயை விரட்டி சான்றிதழ் தரும் வினோத தொழில் - ஜப்பானில் பிரபலமாகி வரும் புதிய பிசினஸ்!

ஜப்பானில் புது வீடு வாங்குவதற்கு முன்பு அங்கு மற்ற வசதிகளை பரிசோதிப்பதற்கு முன்பு பேய் ஓட்டும் சடங்கு கட்டாயமாகி வருகிறது. பொதுவாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும்போது அல்லது வாங்கும் போது அதன் வசதி, பா... மேலும் பார்க்க

Black Swan: இங்கிலாந்திலுள்ள நகரத்தை விட்டு விரட்டியடிக்கப்படும் அன்னப் பறவை; என்ன காரணம் தெரியுமா?

இங்கிலாந்தின் முக்கிய நகரில் சுற்றித் திரிந்த கருப்பு நிற அன்னப்பறவையை அந்த நகரத்தை விட்டு வெளியேற்ற உள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.இங்கிலாந்தின் ஸ்ட்ராட்ஃபோர்ட்-... மேலும் பார்க்க

ஆழ்கடலுக்குள் உயிருக்குப் போராடிய நீச்சல் வீரர்; ஆப்பிள் வாட்ச்சால் உயிர் தப்பியது எப்படி?

மும்பையில் சமீபத்தில் கூகுள் காட்டிய வழியைப் பின் பற்றிச் சென்ற ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கடலுக்குள் விழுந்து உயிரிழந்தனர். பெண் காரில் சென்று நேரடியாகச் சென்று கடலுக்குள் விழுந்தார். மற்றொரு நபர் பை... மேலும் பார்க்க

``எலுமிச்சை, பூஜை இல்லாமல் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் இல்லை'' - டெஸ்லா கார் வாங்கியவர் பதிவு வைரல்

எந்த ஒரு புதிய வாகனம் விலைக்கு வாங்கினாலும் அதனை உடனே கோயிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. பழைய வண்டியை விலைக்கு வாங்கினாலும் அதற்கு ஒரு பூஜை செய்யாமல் இருப்பது கிடையாது... மேலும் பார்க்க

சம்பள வாக்காளர்களை உருவாக்கும் மோடி; மும்பையை அதானியிடம் பா.ஜ.க கொடுத்துவிடும் என தாக்கரே எச்சரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் தசராவையொட்டி மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே மும்பை தாதரில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். பால் தாக்கரே இறந்த பிறகு அதனை உத்தவ் தாக்கரே ஒவ்வொரு ஆண்ட... மேலும் பார்க்க

மும்பையில் இரவு வாழ்க்கை ஆரம்பம்; மகா.வில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இரவில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கூடுதல் நேரம் திறந்... மேலும் பார்க்க