செய்திகள் :

Black Swan: இங்கிலாந்திலுள்ள நகரத்தை விட்டு விரட்டியடிக்கப்படும் அன்னப் பறவை; என்ன காரணம் தெரியுமா?

post image

இங்கிலாந்தின் முக்கிய நகரில் சுற்றித் திரிந்த கருப்பு நிற அன்னப்பறவையை அந்த நகரத்தை விட்டு வெளியேற்ற உள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இங்கிலாந்தின் ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-ஏவன் நகரில் ஒரு கருப்பு நிற அன்னப்பறவை சுற்றி வந்திருக்கிறது, இது அங்கு இருக்கும் மற்ற பறவைகளைத் தாக்கி வருவதை அடுத்து அந்நகரை விட்டு அந்தப் பறவை வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

”ரெஜி” என்று பெயரிடப்பட்ட இந்தப் பறவை அதன் வன்முறை செயல்களால் ”மிஸ்டர் டெர்மினேட்டர்” என்ற பட்டப் பெயரைப் பெற்றிருக்கிறது.

black Swan
black Swan

கடந்த 9 மாதங்களாக இந்த ரெஜி மற்ற பறவைகளைத் தாக்கி நீரில் மூழ்கடிக்க முயற்சி செய்வது எனப் பல்வேறு வன்முறை விஷயங்களில் ஈடுபட்டு வந்துள்ளது.

ரெஜி ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பறவை, கடந்த ஆண்டுதான் அந்த நகரத்திற்கு வந்துள்ளது. இதன் தனித்துவமான கருப்பு நிறம் காரணமாக உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் இடையே இது அதிகம் கவரப்பட்டது.

ஆரம்பத்தில் அனைவரும் விரும்பினாலும் நாளடைவில் இந்தப் பறவை பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறது. பறவைக் குஞ்சுகளைத் தாக்குவது, மற்ற பறவைகளை விரட்டி அடிப்பது எனப் பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டதையடுத்து இந்தப் பறவையை இந்த நகரத்தை விட்டு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பான துறை அதிகாரிகள் அந்தப் பறவையைப் பிடித்து தற்போது தற்காலிகமாக உள்ளூர் பூங்காவில் வைத்துள்ளனர். வேறு இடத்துக்கு (Dawlish Waterfowl Centre) மாற்ற உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பேயை விரட்டி சான்றிதழ் தரும் வினோத தொழில் - ஜப்பானில் பிரபலமாகி வரும் புதிய பிசினஸ்!

ஜப்பானில் புது வீடு வாங்குவதற்கு முன்பு அங்கு மற்ற வசதிகளை பரிசோதிப்பதற்கு முன்பு பேய் ஓட்டும் சடங்கு கட்டாயமாகி வருகிறது. பொதுவாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும்போது அல்லது வாங்கும் போது அதன் வசதி, பா... மேலும் பார்க்க

ஏர்போர்ட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கடிகாரம்; நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்- பின்னணி என்ன?

டெல்லி விமான நிலையத்தில் துபாயைச் சேர்த்த பயணி ஒருவர் அணிந்திருந்த விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ”இது வணிக நோக்கம் கொண்டது” என சுங்க அதிகாரிகள் இதற்குக்... மேலும் பார்க்க

ஆழ்கடலுக்குள் உயிருக்குப் போராடிய நீச்சல் வீரர்; ஆப்பிள் வாட்ச்சால் உயிர் தப்பியது எப்படி?

மும்பையில் சமீபத்தில் கூகுள் காட்டிய வழியைப் பின் பற்றிச் சென்ற ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கடலுக்குள் விழுந்து உயிரிழந்தனர். பெண் காரில் சென்று நேரடியாகச் சென்று கடலுக்குள் விழுந்தார். மற்றொரு நபர் பை... மேலும் பார்க்க

``எலுமிச்சை, பூஜை இல்லாமல் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் இல்லை'' - டெஸ்லா கார் வாங்கியவர் பதிவு வைரல்

எந்த ஒரு புதிய வாகனம் விலைக்கு வாங்கினாலும் அதனை உடனே கோயிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. பழைய வண்டியை விலைக்கு வாங்கினாலும் அதற்கு ஒரு பூஜை செய்யாமல் இருப்பது கிடையாது... மேலும் பார்க்க

சம்பள வாக்காளர்களை உருவாக்கும் மோடி; மும்பையை அதானியிடம் பா.ஜ.க கொடுத்துவிடும் என தாக்கரே எச்சரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் தசராவையொட்டி மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே மும்பை தாதரில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். பால் தாக்கரே இறந்த பிறகு அதனை உத்தவ் தாக்கரே ஒவ்வொரு ஆண்ட... மேலும் பார்க்க

மும்பையில் இரவு வாழ்க்கை ஆரம்பம்; மகா.வில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இரவில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கூடுதல் நேரம் திறந்... மேலும் பார்க்க