செய்திகள் :

சிங்கப்பூர்: பாலியல் தொழிலாளர்களை துன்புறுத்தி, பணப் பறிப்பு; 2 இந்தியர்களுக்கு பிரம்படி, சிறை!

post image

விடுமுறை காரணமாக சிங்கப்பூர் சென்றிருந்தபோது அங்கு ஹோட்டல் அறைகளில் இரண்டு பாலியல் தொழிலாளர்களை வற்புறுத்தி தவறாக நடந்து கொண்டு, கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஆண்களுக்கு தலா 5.1 ஆண்டுகள் சிறையும், 12 பிரம்படிகளும் தண்டனைகளாக விதிக்கப்பட்டன.

இந்தியாவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, ராஜேந்திரன் ஆகியோர் ஏப்ரல் 24 ஆம் தேதி விடுமுறைக்காக இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்ததாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு, லிட்டில் இந்தியா பகுதியில் நடந்து சென்றபோது, ​​அடையாளம் தெரியாத ஒருவர் அவர்களை அணுகி, `பாலியல் சேவைகளுக்காக பெண்களை சந்திக்க ஆர்வமாக உள்ளீர்களா?' என்று கேட்டதுடன்,

அந்த இரண்டு பெண்களின் தொடர்புத் தகவலையும் அவர்களுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

உடனே ஆரோக்கியா, ராஜேந்திரனிடம், ``எனக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே, அந்தப் பெண்களைத் தொடர்புகொண்டு ஹோட்டல் அறைக்கு வரவழைத்து கொள்ளையடிக்கலாம்" எனக் கூறியிருக்கிறார். அதற்கு, ராஜேந்திரனும் ஒப்புக்கொண்டார். அன்று மாலை 6 மணியளவில் ஹோட்டல் அறையில் அப்பெண்ணைச் சந்திக்க அவர்கள் ஏற்பாடு செய்தனர்.

அறைக்குள் நுழைந்ததும், அவர்கள் அப்பெண்ணின் கைகளையும், கால்களையும் துணியால் கட்டி, அடித்து துன்புறுத்தி, அப்பெண்ணின் நகைகள், 2,000 சிங்கப்பூர் டாலர் ரொக்கம், பாஸ்போர்ட் மற்றும் வங்கி அட்டைகளைக் கொள்ளையடித்தார்கள். அன்று இரவே 11 மணியளவில், இரண்டாவது பெண்ணுடன் வேறொரு ஹோட்டலில் சந்திப்பை ஏற்பாடு செய்தனர். அப்பெண் வந்ததும், அவரின் கைகளைப் பிடித்து இழுத்துச் சென்றனர், ராஜேந்திரன் அப்பெண் கூச்சலிடுவதைத் தடுக்க வாயைப் பொத்தினார். அப்பெண்ணிடம் இருந்த 800 சிங்கப்பூர் டாலர் ரொக்கம், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் அவரது பாஸ்போர்ட்டைத் திருடி, அவர்கள் திரும்பி வரும் வரை அறையை விட்டு வெளியேறக் கூடாது என்று மிரட்டினர் .

ஆனால், அப்பெண் மறுநாள் வேறொருவரிடம் ரகசியமாகப் பேசியபோது, ஆரோக்கியசாமி மற்றும் ராஜேந்திரனின் இச்செயல்கள் அம்பலமானதுடன், காவல்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதன்பின் நீதிபதியின் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறைப்பு நடவடிக்கையின் போது,​​ பிரதிநிதித்துவம் இல்லாத இருவரும், நீதிபதியிடம் கருணை மற்றும் இலகுவான தண்டனையை வழங்குமாறு மன்றாடியுள்ளனர்.

" என் தந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டார். எனக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர், அவர்களில் ஒருவர் திருமணமானவர், எங்களிடம் பணம் இல்லை. அதனால்தான் நாங்கள் இதைச் செய்தோம்" என்று ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் பேசிய ஆரோக்கியசாமி கூறினார். " என் மனைவியும் குழந்தையும் இந்தியாவில் தனியாக இருக்கிறார்கள், அவர்கள் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று ராஜேந்திரன் கூறினார்.

மேலும், 23 வயதான ஆரோக்கியசாமி டெய்சன் மற்றும் 27 வயதான ராஜேந்திரன் மயிலரசன் ஆகியோர் விடுமுறை காரணமாக சிங்கப்பூர் சென்றிருந்தபோது அங்கு இரண்டு பாலியல் தொழிலாளர்களை வற்புறுத்தி தவறாக நடந்து கொண்டதுடன் , அவர்களை தானாக முன்வந்து தாக்கி உடமைகளைக் கொள்ளையடித்ததாக தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள்.

அதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும், பிரம்படிகளும் சிறை காவல் தண்டனையும் அறிவிக்கப்பட்டது.

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; 3 மணி நேரம் பலத்த சோதனை

புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தருகின்றனர்.தற்போது விடுமுறை நாள் என்பதாலும் இன்று பிரதோஷம் என்பதாலும் காலையிலிருந்த... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் அஸ்ஸாம் பாடகர் விஷம் கொடுத்து கொலையா? - அதிர்ச்சி வாக்குமூலம்; இருவர் கைது!

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஜுபீன் கார்க் தலைமையிலான இசைக்குழு கடந்த மாதம் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான 60 ஆண்டு தூதரக உறவை கொண்டாட சிங்கப்பூர் சென்று இருந்தது. இப்பயணத்தின் போது ஜுபீன் கார்க் ம... மேலும் பார்க்க

மபி, ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த 12 குழந்தைகள் மரணம்; சர்ச்சைக்குரிய மருந்துகளுக்குத் தடை

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2 வயதுக்கு உட்பட்ட இக்குழந்தைகள் இருமலுக்கு மருந்து குடித்த சில நாட்களில் சிறுந... மேலும் பார்க்க

திருமணத்திற்கு மறுத்த காதலன்; கணவன் துணையோடு கொலை செய்த பெண் சாமியார்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் பகுதியைச் சேர்ந்தவர் பூஜா பாண்டே. இந்து மகாசபை தலைவராக இருக்கிறார். தன்னை ஆன்மிகத் தலைவராக காட்டிக்கொள்ளும் பூஜா பாண்டேக்கு ஏற்கனவே திருமணமாகி அசோக் பாண்டே என்ற கணவர் இருக... மேலும் பார்க்க

NCRB: `வேலையில்லா திண்டாட்டம் உயிரிழப்பு; போக்சோ வழக்கு' - கவலையளிக்கும் 2023 அறிக்கை

தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகம் (NCRB) அறிக்கை'வேலையில்லாத காரணத்தால் கடந்த 2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 14, 234 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 15.4 சதவிகிதம் பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்' என்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையை உலுக்கிய இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான 2 காவலர்களும் `டிஸ்மிஸ்’!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் தனது வளர்ப்புத் தாயுடன் கடந்த 29-9-2025 அன்று இரவு காளஹஸ்தியில் இருந்து வாழைத்தார் ஏற்றிவந்த மினி வேனில் திருவண்ணாமலை மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறார். காய... மேலும் பார்க்க