செய்திகள் :

கோவை: காயத்துடன் 3 நாள்களாக ஆற்றில் நிற்கும் யானை - சிகிச்சை அளிக்க வனத்துறை தீவிரம்

post image

கோவை மாவட்டம், ஆனைகட்டி பகுதியில், உடலில் காயங்களுடன் ஒரு மக்னா யானை கடந்த ஒரு வாரமாக சுற்றி கொண்டிருக்கிறது. அந்த யானை கேரளா வனப்பகுதியில் இருந்து வெளியேறி, தமிழக வனப்பகுதியான கூடப்பட்டி என்கிற கிராமத்தின் அருகே வந்துள்ளது.

ஆனைகட்டி

பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்து வருகிறார்கள். யானை தமிழ்நாடு மற்றும் கேரளா வனப்பகுதிகளுக்கு மாறி மாறி சென்று வருகிறது. இதன் காரணமாக யானைக்கு சிகிச்சை அளிப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.

காயமடைந்துள்ள மக்னா யானையை இரண்டு மாநில வனத்துறையினரும் கண்காணித்து வருகிறார்கள். தற்போது அந்த யானை பவானி ஆற்றில் நின்று கொண்டிருக்கிறது. வனத்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில்,

வனத்துறை

இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மக்னா யானைக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.  வாழை, பலா, பழங்கள் மூலம் மருந்து வைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “யானை மருந்துகளை உட்கொள்ள தொடங்கியுள்ளது. தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுகிறது. மருத்துவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் யானையை கண்காணித்து வருகிறார்கள்.

யானை

தற்போது யானை பவானி ஆற்றின் மையப்பகுதியில் நிற்கிறது. எனவே யானை சிகிச்சை அளிப்பதில் சற்று சிக்கல் நிலவுகிறது. யானை தண்ணீரில் இருந்து வெளியேறியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும்.” என்றனர்.

`எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதமரை நியமிக்கலாம்!' - என்ன சொல்கிறார் சீமான்?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் கடற்கரை பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். மீனவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருடன் மீன்பிடிக்கும... மேலும் பார்க்க

மதுரை: குண்டும் குழியும் நிறைந்த காளவாசல்-மேலக்கல் சாலை; சாகச பயணம் செய்யும் மக்கள் | Photo Album

மதுரை: காளவாசல்-மேலக்கல் சாலைமதுரை: காளவாசல்-மேலக்கல் சாலைமதுரை: காளவாசல்-மேலக்கல் சாலைமதுரை: காளவாசல்-மேலக்கல் சாலைமதுரை: காளவாசல்-மேலக்கல் சாலைமதுரை: காளவாசல்-மேலக்கல் சாலைமதுரை: காளவாசல்-மேலக்கல் ச... மேலும் பார்க்க

``இது போன்ற புத்தி செந்தில் பாலாஜிக்கு இருக்காது; பழனிசாமி தலைகீழாக நின்றாலும்" - டிடிவி தினகரன்

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "கரூர் விவகாரத்தில் தன் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும், கூட்டணி கட்சிகள் விஜயை கைது செய்யக் கூறிய போதும்... மேலும் பார்க்க

நீதிபதியையும் விமர்சனம் செய்யும் TVK-யினர், கட்டுப்படுத்த வேண்டிய தலைவர் எங்கே? | Vijay | Stalin

* ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு! * உண்மை வெளிவரும் - ஆதவ் அர்ஜுனா * முன் ஜாமின் மறுப்பு - தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் தலைமறைவு!* கரூர் துயர சம்பவம் - சிறப்பு புலனாய்வு க... மேலும் பார்க்க