செய்திகள் :

கூடலூர்: குட்டியுடன் குப்பை தொட்டியில் உணவு தேடி அலையும் தாய் யானை; கேலிக்கூத்தாகும் சூழல் சுற்றுலா?

post image

சுற்றுலாவின் பெயரால் நீலகிரியில் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க சூழல் சுற்றுலா என்கிற பெயரில் வனத்துறையால் சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,

உணவு தேடி அலையும் யானை

கூடலூர் அருகில் உள்ள ஊசிமலை சூழல் சுற்றுலா தலம் பகுதியில் அவலத்தின் உச்சமாக தாய் யானை ஒன்று தன்னுடைய குட்டியுடன் குப்பைத் தொட்டியில் உணவு தேடி அலையும் நிலை காண்போரை கண்கலங்கச் செய்திருக்கிறது.

இது குறித்து தெரிவிக்கும் கூடலூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், " யானைகளின் வாழிடங்கள் மற்றும் வழித்தடங்களின் சிதைவு, தனியார் பெருந்தோட்டங்களின் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத தடுப்பு வேலிகள் போன்றவை யானைகளை நிலைகுலையச் செய்திருக்கின்றன.‌ தடம் மாறும் யானைகளால் ஏதுமறியா அப்பாவி கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

உணவு தேடி அலையும் யானை

மேலும், இறைச்சி கழிவுகள், காய்கறி, பழக் கழிவுகள் போன்ற உணவுக் கழிவுகள் முறையாக மேலாண்மை செய்யப்படாத காரணத்தால் கவரப்படும் கரடி, காட்டு மாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் குப்பைத் தொட்டிகளில் உணவு தேடி அலைகின்றன.

இந்த நிலையில், ஊட்டி - கூடலூர் சாலையில் அமைந்துள்ள ஊசி மலை பகுதியில் வனத்துறையினர் தான் சூழல் சுற்றுலாவை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் முறையாக கழிவுகளை மேலாண்மை செய்யாத காரணத்தால் பாவப்பட்ட யானைகள் குப்பைத் தொட்டியில் உணவு தேடி அலைகின்றன.

உணவு தேடி அலையும் யானை

அவற்றிற்கு கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. மேலும், யானைகள் சாலைக்கு வருவதால் பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது. முன்மாதிரியாக இருக்க வேண்டிய சூழல் சுற்றுலாவை கேலிக்கூத்தாக்கும் வனத்துறையின் செயல் அதிர்ச்சி தருகிறது. இது குறித்து முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் " என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆர்ப்பரிக்கும் காவிரி! பிரமாண்டமான இரட்டை அருவிகள்!

பாராசுக்கி அருவிககனாசுக்கி அருவிககனாசுக்கி அருவிபாராசுக்கி அருவி காவிரி ஆறு ககனாசுக்கி அருவிககனாசுக்கி அருவிககனாசுக்கி அருவிககனாசுக்கி அருவிபாராசுக்கி அருவிபாராசுக்கி அருவிபாராசுக்கி அருவிககனாசுக்கி அ... மேலும் பார்க்க

பிலிப்பைன்ஸ்: சக்திவாய்ந்த நிலநடுக்கம், 6.9 ஆக பதிவு; 31 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், விசாயாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த... மேலும் பார்க்க

ஆயுத பூஜை: சென்னை பூக்கடை பகுதியில் பூஜை பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் | Photo Album

ஆயுத பூஜை - சென்னை பூக்கடை பகுதியில் விற்பனை ஆயுத பூஜை - சென்னை பூக்கடை பகுதியில் விற்பனை ஆயுத பூஜை - சென்னை பூக்கடை பகுதியில் விற்பனை மேலும் பார்க்க

பாபநாசம்: கோயில், டிபன் கடைக்குள் புகுந்து எண்ணெய் குடித்துச் சென்ற கரடிகள்; பீதியில் மக்கள்!

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா, சிங்கவால் குரங்கு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள... மேலும் பார்க்க