செய்திகள் :

கேரளா: ரூ.25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி பரிசு; பெயின்ட் கடை தொழிலாளி கோடீஸ்வரர் ஆனார்!

post image

கேரள மாநிலத்தில் அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் லாட்டரி துறை சார்பில் லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வாராந்திர லாட்டரி, விழாக்கால லாட்டரி என பல்வேறு வகையான லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துவருகிறது. அதில் ஓணம் லாட்டரியில் பம்பர் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சனிக்கிழமை கேரள மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் முன்னிலையில் லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெற்றது. அதில் TH 577855 என்ற எண்கொண்ட லாட்டரி சீட்டுக்கு 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்தது. அந்த சீட்டு எர்ணாகுளம் நெட்டூரில் உள்ள லாட்டரி சீட்டு ஏஜெண்ட் லதீஸ் என்பவர் விற்பனை செய்திருந்தார். ஆனால் அந்த சீட்டை வாங்கியவர் யார் என்ற தேடல் கடந்த இரண்டு நாள்களாக இருந்தது. இந்த நிலையில் நெட்டூரில் பெயின்ட் விற்பனை நிறுவன ஊழியரான சரத் எஸ்.நாயர் என்பவருக்கு ரூ.25 கோடி ஓணம் பம்பர் பரிசு விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. இன்று துறவூர் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் பரிசு விழுந்த லாட்டரி சீட்டு மற்றும் தனது வங்கி பாஸ்புக் ஆகியவற்றை ஒப்படைத்தார் சரத் எஸ்.நாயர்.

லாட்டரிச்சீட்டு குலுக்கல் நடைபெற்றபோது அமைச்சர் கே.என்.பாலகோபால் கலந்துகொண்டார்.

இதுபற்றி சரத் எஸ்.நாயர் கூறுகையில், "எப்போதாவது லாட்டரி எடுக்கும் பழக்கம் உண்டு. இப்போதுதான் பம்பர் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. ஓணம் லாட்டரி குலுக்கல் நடைபெற்ற சமயத்தில் நான் நெட்டூரில் உள்ள பெயின்ட் விற்பனைக்கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். லாட்டரி முடிவுகள் வெளியானதும் எனது மொபைலில் போட்டோ எடுத்து வைத்திருந்த லாட்டரிச் சீட்டின் எண்ணை சரிபார்த்தேன். நான் எடுத்த லாட்டரிச் சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளது தெரியவந்தது. ஆனாலும், வீட்டுக்கு போன் செய்து மனைவியிடம் லாட்டரி சீட்டில் உள்ள எண்ணை சரிபார்க்கச் சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டேன். அதன்பின்னர், அவசரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என பர்மிசன் கேட்டுவிட்டு கடையில் இருந்து கிளம்பினேன்.

கோடீஸ்வரர் ஆன சரத் எஸ்.நாயர் குடும்பத்துடன்

வீட்டுக்குச் சென்று ஒரிஜினல் டிக்கெட்டை நேரில் பார்த்து மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன். வெளியில் யாரிடமும் கூறவில்லை. என் அப்பா, அம்மா, மனைவி, சகோதரன், குழந்தை ஆகியோருக்கு மட்டுமே தெரியும். இன்று சகோதரருடன் வங்கிக்குச் சென்று லாட்டரி சீட்டை ஒப்படைத்தேன். நான் வீடு  கட்டியதில் சிறிது கடன் உள்ளது. அதை அடைக்கவேண்டும். குடும்பத்தினருடன் ஆலோசித்து பரிசுத்தொகையை எப்படி பயனுள்ள வகையில் செலவிடுவது என முடிவு செய்வேன்" என்றார்.

சரத் எஸ்.நாயர் கடந்த 12 ஆண்டுகளாக பெயின்ட் கடையில் வேலை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

CJI கவாய் மீது தாக்குதல்: "சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது" - திருமாவளவன் கண்டனம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.கிட்டத்தட்ட அனைத்து மாநில மற்றும் தேசிய கட்சிகளும் தலைவர்களும் நீதிபதி மீதான தாக்க... மேலும் பார்க்க

கமல் ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன், கரூர் த.வெ.க பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது செய்தி... மேலும் பார்க்க

Kantara: "தர்மத்தையும் துளு நாட்டின் கலாச்சாரத்தையும் சேர்த்துள்ளார் ரிஷப் ஷெட்டி" - அண்ணாமலை ரிவ்யூ

இந்தியா முழுவதும் ஹிட் ஆகியிருக்கும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இன்று சமூக வலைதளத்தில் முக்கிய பேசுபொருளாக இருக்கிறது. விமர்சகர்கள், ரசிகர்கள், திரையுலகினரைக் கடந்து பல துறைகளைச் சேர்ந்தவர்கள் படக்... மேலும் பார்க்க

நீதிபதி கவாய் மீது தாக்குதல்: "இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது" - ஸ்டாலின் கண்டனம்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற அந்த நபர், "சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறு... மேலும் பார்க்க

'கரூர் வழக்கில் விஜய்யை குற்றவாளி ஆக்குவதா? தவெகவை திமுக நசுக்க பார்க்கிறது' - அண்ணாமலை

பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரூர் விவகாரத்தில்சமூக வலைதளங்களில் நீதிபதியை விமர்சிப்பது துரதிஷ்டவசமானது. நீதிபதி குறித்து... மேலும் பார்க்க

``இது தவறோ, அலட்சியமோ அல்ல; பெரும் அரசியல் குற்றச்செயல்" -காங்கிரஸ் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 22.7 லட்சம் மக்களின் பெயர்களைத் திட்டமிட்டு நீக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2020 தேர்தலின்போது காங்கிரஸ் நெர... மேலும் பார்க்க