செய்திகள் :

தீபாவளி சிறப்பு பேருந்துகள்: எந்தெந்த பேருந்துகள் எங்கிருந்து கிளம்பும்? - அமைச்சர் சிவசங்கர் தகவல்!

post image

இந்த மாதம் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை. திங்கள் கிழமை தீபாவளி என்பதால் அதற்கு முந்தைய சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை என தொடர் விடுமுறையாக அமைந்திருக்கிறது. வழக்கம்போல சென்னையிலிருந்து பல லட்சம் மக்கள் ஒரே சமயத்தில் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

இந்நிலையில் அத்தனைபேருக்கும் பேருந்து வசதிகள் ஏற்பாடுகள் செய்ய ஆண்டுதோறும் தமிழக அரசு எப்போது சிறப்பு பேருந்துகளை அறிவிக்கும். அவ்வகையில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகள் வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலான 4 நாட்கள் இயக்கப்படும்.

`தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னையில் இருந்து மட்டும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு 14,268 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதற்காக 15,129 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையை தவிர்த்து பிற ஊர்களில் இருந்து மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக 6,110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல இதுவரை 2 லட்சம் பேர் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்." என்று தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் சிவசங்கர்

"கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்களும், கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன" என்றும் "ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் வழக்கம்போல எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

மேலும், "மக்கள் பேருந்துகளில் பட்டாசுகளை எடுத்துச் செல்வது பேராபத்து. பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் கண்டறியப்பட்டால் உடனே பேருந்தில் இருந்து இறக்கிவிடப்படுவர்" என்று அறிவுறித்தியிருக்கிறார்.

பேருந்து நிலையங்கள்

கிளாம்பாக்கம் (KCBT) - புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு: ECR, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர், திருத்தணி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்

மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள், திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை

தென்காசி: சோலார் மின் ஆலை அமைக்க எதிர்ப்பு; ஆட்சியர் அலுவலகம் முன் 8 நபர்கள் தீக்குளிக்க முயற்சி!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்துள்ள கல்லத்திகுளம் பகுதியில் தனியார் நிறுவனம் சோலார் மின் ஆலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சோலார் மின் ஆலை அமைப்பதனால் வெ... மேலும் பார்க்க

கொல்கத்தா: பாஜக எம்.பி மீது கல்வீச்சு; ரத்தம் வழிய மருத்துவமனையில் அனுமதி; பின்னணி என்ன?

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காகன் முர்மு மீது உள்ளூர்வாசிகள் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொ... மேலும் பார்க்க

நீலகிரி: மக்கள் கூடும் இடங்களில் பெண்களை பாதுகாக்க பிங் பேட்ரோல் அறிமுகம்! - விவரம் என்ன?

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் முயற்சியாக பல்வேறு திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிங்க் ரோந்து வாகனத்தை நீலகிரியில் முதல் முறையாக... மேலும் பார்க்க

'ஹெச்-1பி விசா அதிக கட்டணம் விரைவில் ரத்தா?' - அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர் சொல்லும் காரணம்

இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹெச்-1பி விசா குறித்து அதிரடி அறிவிப்பை ஒன்றை அறிவித்துள்ளார். அதன் படி, கடந்த 22-ம் தேதி முதல், இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 1 லட்சம் டாலர்கள... மேலும் பார்க்க

"சேலம் 'Fake Wedding' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்" -வேல்முருகன் காட்டம்

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது போல், சேலம் மாநகரில் 'பேக் வெட்டிங்' இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. திருமண விழா ... மேலும் பார்க்க

"நரித்தனம்; கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை" - டிடிவி காட்டம்!

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க ... மேலும் பார்க்க