செய்திகள் :

இருமல் மருந்து: சிரப் எச்சரிக்கை முதல் மருந்தில்லா தீர்வுகள் வரை மருத்துவர் விளக்கம்

post image

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள், சில நாட்களில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது, இந்திய அளவில் பெற்றோர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உயிரிழப்பு நடந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் இருமல் மருந்தின் 19 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில், 9 மாதிரிகளில், சிறுநீரக பாதிப்புக்குக் காரணமான டை எத்திலின் க்ளைகால் (diethylene glycol) மற்றும் எத்திலின் க்ளைகால் (ethylene glycol) போன்ற நச்சுப்பொருட்கள் இல்லை என்று தெரிய வந்துள்ளது. 10 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வராத நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ’Coldrif’ என்ற இருமல் மருந்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இருமல் மருந்து
இருமல் மருந்து

இந்த இருமல் மருந்து விஷயத்தில் நாம் அச்சம் கொள்ள வேண்டுமா என, சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம்.

'’அந்த குழந்தைகள் இறந்ததற்கு, சிரப்களில் அசுத்தமாக சேர்ந்த நச்சுப்பொருளான டை எத்திலின் க்ளைகால் மற்றும் எத்திலின் க்ளைகால் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு வந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை மற்றும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவை நடத்திய சோதனையில், அந்த டானிக்குகளில் டை எத்திலின் க்ளைகால் மற்றும் எத்திலின் க்ளைகால் இல்லை என்று கூறிவிட்டது.

இருமல் மருந்து
இருமல் மருந்து

தவிர, ராஜஸ்தானில் இறந்த இரண்டு குழந்தைகளின் இறப்புக்கு இருமல் டானிக்கில் டெக்ஸ்ட்ரோமெதோர்ஃபன் (dextromethorphan) எனும் மருந்து இருந்ததே காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டெக்ஸ்ட்ரோமெதோர்ஃபன் மருந்து வழங்குவதற்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஃபினைல் எஃப்ரின்( phenyl ephrine) மற்றும் க்ளோர் ஃபெனிரமின் மேலியேட் (Chlorpheniramine maleate) என்கிற இவ்விரண்டு மருந்துகளின் கூட்டான இருமல் டானிக்கை நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது என்கிற உத்தரவு 2023 டிசம்பர் மாதமே பிறக்கப்பிட்டுள்ளது. மத்திய சுகாதார சேவை இயக்குநர் டாக்டர். சுனிதா சர்மாவும், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் டானிக் வழங்கக்கூடாது என்றும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகிற இருமலை குணமாக்க மருந்தில்லா மருத்துவ முறைகளை பயன்படுத்தும்படியும் அறிவுறுத்தியிருக்கிறார்.

இருமல் மருந்து
இருமல் மருந்து

ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை இருமல் டானிக்குகளை மருத்துவருடைய பரிந்துரை இல்லாமலேயே மருந்தகங்களில் வாங்க முடியும். இது சட்டப்படி தவறென்றாலும், தங்கு தடையின்றி நடந்துகொண்டே தான் இருக்கிறது. சுய மருத்துவம் செய்துகொள்வது என்றாவது ஒருநாள் ஆபத்தில் முடியலாம்’’ என்று எச்சரிக்கிற மருத்துவர், இருமலுக்கானத் தீர்வுகளையும் சொல்கிறார்.

’’வறட்டு இருமல், வைரஸ் தொற்று, நெஞ்செரிச்சல், ஒவ்வாமை, சுவாசப்பாதை தொற்று, ஆஸ்துமா என பல காரணங்களால் இருமல் ஏற்படும். அதனால் இருமல் என்பது நோய் கிடையாது. அது ஓர் அறிகுறி தான்.

 டாக்டர் ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

வறட்டு இருமல் என்றால் காலையும், இரவும் ஒரு டீஸ்பூன் தேன் வருகி வந்தால், தேன் சுவாசப்பாதையை இதமாக்கி இருமலைக் கட்டுப்படுத்தக் கூடும்

நெஞ்செரிச்சலால் இருமல் வந்தால், மசாலா மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட்டு, நெஞ்செரிச்சலுக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இருமல் கட்டுப்படும்.

சுவாசப்பாதையில் பிரச்னை காரணமாக இருமல் வந்தால், அடிக்கடி வெதுவெதுப்பான நீர், சூப், இஞ்சி டீ போன்றவற்றை அருந்துவது சுவாசப்பாதையை லேசாக விரிவடையச் செய்யும். எனவே இருமல் குறையலாம். உப்பு போட்ட வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்புளிக்கும் போதும் இருமல் குறையலாம்.

சிலருக்கு ஏசி அறைகளில் இருக்கும்போது தொண்டை உள்ளிட்ட சுவாசப்பாதை வறண்டு போய் புகைச்சல் இருமல் வரும். நீராவி பிடித்தல் அல்லது ஈரப்பதத்தை அதிகரிக்கும் ஹ்யூமிடிஃபையர் உபயோகிக்கும்போது இந்த வகை இருமல் குறையலாம். தவிர, ஏசி அறைகளில் இருப்பவர்களுக்கு அந்த நுண் தூசி காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு இருமல் ஏற்படலாம். ஏசியை முறையாக அடிக்கடி சுத்தம் செய்வது இதை வராமலே தடுக்கும்.

ஆஸ்துமா போன்ற நிலையில் சுவாசப்பாதை சுருக்கத்தால் இருமல் வந்தால், அதற்கான சிகிச்சையை மருத்துவரிடம் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.

அமெரிக்கா: ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்கி பருகும் பாடி பில்டர்கள் - என்ன காரணம் தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த சில தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் போக மீதி இருக்கும் பாலை ஆன்லைனில் தளங்களில் விற்று டாலர்களில் சம்பாதித்து வருகின்றனர். தாய்ப்பால் விற்பனை செய்து ஒரே நாளில்... மேலும் பார்க்க

கோன்பனேகா குரோர்பதி: 7 ஆண்டுக்கால முயற்சி; யூடியூப் மூலம் படித்து ரூ.50 லட்சம் வென்ற விவசாயி!

நடிகர் அமிதாப்பச்சன் நடத்தும் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகும். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமானோர் லட்சாதிபதியாகி இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதில் பங்கெடுத்து கோடீஸ்வரராகி இருக்க... மேலும் பார்க்க

பயணிகளின் காலைப் பொழுதை இனிமையாக்கும் வாசனை அலாரம்! இது எங்கே தெரியுமா?

வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல்வேறு யுத்திகள் ஹோட்டல் நிர்வாகம் கையாண்டு வருவதை கேள்விப்பட்டிருப்போம். ஆஸ்திரேலியாவில் ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் ( Holiday inn Express) என்ற ஹோட்டல் நிறுவனம் தங்களது ஹோட்டல... மேலும் பார்க்க

பேயை விரட்டி சான்றிதழ் தரும் வினோத தொழில் - ஜப்பானில் பிரபலமாகி வரும் புதிய பிசினஸ்!

ஜப்பானில் புது வீடு வாங்குவதற்கு முன்பு அங்கு மற்ற வசதிகளை பரிசோதிப்பதற்கு முன்பு பேய் ஓட்டும் சடங்கு கட்டாயமாகி வருகிறது. பொதுவாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும்போது அல்லது வாங்கும் போது அதன் வசதி, பா... மேலும் பார்க்க

Black Swan: இங்கிலாந்திலுள்ள நகரத்தை விட்டு விரட்டியடிக்கப்படும் அன்னப் பறவை; என்ன காரணம் தெரியுமா?

இங்கிலாந்தின் முக்கிய நகரில் சுற்றித் திரிந்த கருப்பு நிற அன்னப்பறவையை அந்த நகரத்தை விட்டு வெளியேற்ற உள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.இங்கிலாந்தின் ஸ்ட்ராட்ஃபோர்ட்-... மேலும் பார்க்க

ஏர்போர்ட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கடிகாரம்; நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்- பின்னணி என்ன?

டெல்லி விமான நிலையத்தில் துபாயைச் சேர்த்த பயணி ஒருவர் அணிந்திருந்த விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ”இது வணிக நோக்கம் கொண்டது” என சுங்க அதிகாரிகள் இதற்குக்... மேலும் பார்க்க