செய்திகள் :

``இன்ஸ்டாகிராமில்தான் முதல் அறிமுகம்'' - சோபிதாவுடன் மலர்ந்த காதல் நினைவுகளைப் பகிர்ந்த நாகசைதன்யா

post image

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பிறகு சமந்தா இப்போது வேறு ஒருவரை காதலித்துக்கொண்டிருக்கிறார்.

அதேசமயம் சமந்தாவிடமிருந்து விவாகரத்து பெற்ற நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதலிக்கத் தொடங்கிய சில மாதங்களில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர்.

அவர்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது என்பது குறித்து நடிகர் நாக சைதன்யா பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

சோபிதா துலிபாலா, நாகசைதன்யா,
சோபிதா துலிபாலா, நாகசைதன்யா,

அவர் தனது பேட்டியில்,

''நான் எனது மனைவியை இன்ஸ்டாகிராமில் சந்தித்தேன். நான் இன்ஸ்டாகிராமில் எனது பார்ட்னரை சந்திப்பேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அவரது வேலைகள் எனக்குத் தெரியும்.

ஒரு முறை இன்ஸ்டாகிராமில் சமையல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தேன். அதனைப் பார்த்த சோபிதா அதற்கு எமோஜியைப் பகிர்ந்து இருந்தார்.

உடனே அவருடன் சாட்டிங் செய்தேன். அதன் பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி சாட்டிங் செய்து பின்னர் சந்தித்துக்கொண்டோம்.

சோபிதா தான் எனக்கு மிகப்பெரிய ஆதரவு. அவர் இல்லாமல் என்னால் வாழமுடியாது. ஒரு முறை சோபிதாவிற்கு நான் வைத்திருந்த நிக்நேமை எனது படத்தில் பயன்படுத்தி இருந்தனர்.

இதனால் சோபிதா கடும் கோபமாகிவிட்டார். நான் தான் படத்தின் இயக்குனரிடம் சொல்லி அந்த நிக்நேமை பயன்படுத்த அனுமதி கொடுத்ததாக நினைத்து சில நாட்கள் என்னுடன் சோபிதா பேசாமல் இருந்தார்'' என்று தெரிவித்தார்.

`ரூ.60 கோடி மோசடி வழக்கு' - பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் போலீஸார் 4 மணி நேரம் விசாரணை

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் சேர்ந்து ரூ.60 கோடியை மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவர் 2015ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க

``நான் சிறையில் இருக்க தயாராக இருக்கிறேன்; ஆனால்'' - நீதிபதி மீது செருப்பு வீசிய வழக்கறிஞர்

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது ஷூவை எடுத்து வீசினார். ஆனால் அந்த செருப்பு தலைமை நீதிபதி மீது படவில்லை. சனாதனத்தை அவமதிப... மேலும் பார்க்க

விண்வெளியில் ஓர் வீரர் உயிரிழந்தால் என்ன நடக்கும்? - நாசாவின் ரூல்ஸ் இதுதான்!

மனிதன் விண்வெளிக்கு பயணம் செய்யத் தொடங்கியது முதல் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் திட்டங்கள் வரை விண்வெளிப் பயணங்களுக்கு என சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.ஒருவேளை... மேலும் பார்க்க

15 மனைவிகள்; 30 குழந்தைகள்; விமான நிலையத்தையே வியப்படைய வைத்த தென்னாப்பிரிக்க மன்னர்!àà

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்தில் கடந்த ஜுலை மாதம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் எஸ்வாட்டினி என்ற சிறிய நாடு ஒன்று உள்ளது... மேலும் பார்க்க

300 ஆண்டு பழைமையான ஸ்பானிய கப்பல்; கடலுக்கு அடியில் கிடைத்த ரூ.8 கோடி மதிப்பிலான நாணயங்கள்!

அமெரிக்காவின் ஃபுளோரிடா கடற்கரைக்கு அப்பால், 30 ஆண்டுகள் பழைமையான ஸ்பானிஷ் கப்பல் சிதைவிலிருந்து சுமார் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி) மதிப்புள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்கம் மற்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியைத் தொடர்ந்து கும்பிட்ட நிதீஷ் குமார்: `அவருக்கு என்ன ஆச்சு?' - எதிர்க்கட்சிகள் கேள்வி

பீகாரில் அடுத்த ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் அவசர அவசரமாக நலத்திட்ட உதவிகளை அறிவித்த... மேலும் பார்க்க