செய்திகள் :

தொடர்ந்து உயரும் வெள்ளியை வாங்கிக் குவிக்கும் ரஷ்யா; இது அமெரிக்காவிற்கு எதிரான ரஷ்யாவின் உத்தியா?

post image

தினம் தினம் தங்கம் விலை அதிகரித்து வருவதுபோல, வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.

இந்த வெள்ளி விலை உயர்விற்கு, தங்கம் விலை உயர்வும், வெள்ளியின் தேவையும் தான் காரணம்.

இந்த நிலையில், 'ரஷ்யா தொடர்ந்து வெள்ளியை வாங்கி குவித்து வருகிறது' என்கிற புதிய தகவலை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

"தற்போது ரஷ்யாவின் மத்திய வங்கி வெள்ளியை வாங்கி குவித்து வருகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை உலக நாடுகளின் வங்கி, வெள்ளியை வாங்கிக் குவித்ததைப் பெரிதாகக் கேள்விப்பட்டதில்லை.

தங்கத்தைத் தான் அதன் மதிப்பு கருதி உலக வங்கிகள் வாங்கும். வெள்ளி பெரும்பாலும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தான் பயன்படுத்தப்படும்.

அப்படியிருக்கையில், ரஷ்யா வெள்ளியை வாங்கிக் குவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

வெள்ளை மாளிகையும், வெள்ளியும்

கடந்த மாதம், வெள்ளை மாளிகை அரிய கனிமங்களின் பட்டியலில் வெள்ளியைச் சேர்த்தது. இது வெள்ளியின் விலையை உயர்த்தலாம் என்று அப்போது கணிக்கப்பட்டது.

அநேகமாக, அப்போதிருந்துதான் ரஷ்யா வெள்ளியை வாங்கத் தொடங்கியிருக்கும்.

ரஷ்யா - உக்ரைன் போரை முன்னிட்டு, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குபவர்கள் மீது வரி விதிக்கப்படுகிறது. ஆனால், வெள்ளி தங்கள் வசம் இருந்தால், இந்த விஷயத்தில் தங்கள் மீது வரி விதிக்க முடியாது என்று ரஷ்யா கருதலாம்.

காரணம், தொழிற்சாலைகளில் மில்லியன் கணக்கில் வெள்ளியின் பயன்பாடு இருக்கிறது.

அதனால், இது ரஷ்யாவின் புதிய உத்தியாக இருக்கலாம்".

பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள 'Vikatan Play'-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள்.

Vikatan Play-ல் Opening Bell Show
Vikatan Play-ல் Opening Bell Show

Modi: 'குஜராத் முதல்வர், பிரதமர்' - இன்றோடு 25-வது ஆண்டைத் தொடும் பிரதமர் மோடி; குவியும் வாழ்த்து!

இன்றோடு பிரதமர் மோடி மத்திய, மாநில அரசில் தலைமைப் பதவி வகிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன.மோடி பதிவு அதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது..."இன்றுதான் 2001-ம் ஆண்டு, கு... மேலும் பார்க்க

கும்பகோணம்: ``அரசுப்பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை'' - சர்ச்சையான திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் பள்ளி மேம்பாட்டு நிதியில... மேலும் பார்க்க

"ஊடகங்களை முடக்கும் பாசிச போக்கு!" - அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டதா புதிய தலைமுறை?

அரசு கேபிளிலிருந்து முன்னணி செய்தி சேனலான புதிய தலைமுறை பல பகுதிகளில் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.கரூர் சம்பவத்தில் அரசை விமர்சிக்கும் தொனியில் வெளியிடப்பட்ட செய்திகளால்தான் புதிய தலைமு... மேலும் பார்க்க

புதிய தலைமுறை : `அரசே கேபிள் நடத்தினால் இதுபோன்ற தவறுகள் நடக்கும்' - பத்திரிகையாளர் ப்ரியன்

கட்டுரையாளர்ப்ரியன், மூத்த பத்திரிகையாளர் அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனல் பிளாக் செய்யப்பட்டிருக்கிறது என்று ஊடக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் கடந்த மூன்று நாட்களாக பரபரப்பாகப் பேசப்படுகிறத... மேலும் பார்க்க

பிரேசில் அதிபருக்கு போன் செய்த ட்ரம்ப்; `எங்கள் மீதான வரியை குறையுங்கள்' கேட்ட லூலா - அடுத்து என்ன?

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது மட்டுமல்ல, பிரேசில் மீதும் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்திருக்கிறது அமெரிக்கா. இந்த வரி விதிப்பிற்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பைத் தெரிவி... மேலும் பார்க்க

"இபிஎஸ் உடன் ராமதாஸ் ஐயா தனியாக என்ன பேசினார் என எனக்குத் தெரியாது"- பாமக எம்எல்ஏ அருள்

பாமக நிறு​வனர் ராம​தாஸ் இதய பரிசோதனைக்​காக சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் கடந்த 5-ம் தேதி அனு​ம​திக்​கப்​பட்​டார். முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி போன்ற அரசியல் தலைவர்கள்... மேலும் பார்க்க