செய்திகள் :

"இபிஎஸ் உடன் ராமதாஸ் ஐயா தனியாக என்ன பேசினார் என எனக்குத் தெரியாது"- பாமக எம்எல்ஏ அருள்

post image

பாமக நிறு​வனர் ராம​தாஸ் இதய பரிசோதனைக்​காக சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் கடந்த 5-ம் தேதி அனு​ம​திக்​கப்​பட்​டார்.

முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி போன்ற அரசியல் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இன்று (அக்.7) பாமக எம்.எல்.ஏ அருள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருக்கிறார்.

ராமதாஸ்
ராமதாஸ்

"நேற்று முன்தினம் ஒரு பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எல்லா பரிசோதனைகளும் முடிந்து முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இன்று மாலை வீடு திரும்புகிறார்.

இந்த ஒரு வாரம் மட்டும் ஐயா ஓய்வில் இருப்பார். அதன்பிறகு அவர் பணிகளை மேற்கொள்வார்.

பாமக என்றால் ராமதாஸ் ஐயா மட்டும்தான். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் அதைத் தான் சொல்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ராமதாஸை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அருள், " முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி, ஐயா அவர்களை நேரில் சந்தித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அரை மணி நேரம் பேசியது உங்கள் அனைவருக்கும் தெரியும். இரு பெரும் தலைவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியாது" என்று கூறியிருக்கிறார்.

"ஊடகங்களை முடக்கும் பாசிச போக்கு!" - அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டதா புதிய தலைமுறை?

அரசு கேபிளிலிருந்து முன்னணி செய்தி சேனலான புதிய தலைமுறை பல பகுதிகளில் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.கரூர் சம்பவத்தில் அரசை விமர்சிக்கும் தொனியில் வெளியிடப்பட்ட செய்திகளால்தான் புதிய தலைமு... மேலும் பார்க்க

புதிய தலைமுறை : `அரசே கேபிள் நடத்தினால் இதுபோன்ற தவறுகள் நடக்கும்' - பத்திரிகையாளர் ப்ரியன்

கட்டுரையாளர்ப்ரியன், மூத்த பத்திரிகையாளர் அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனல் பிளாக் செய்யப்பட்டிருக்கிறது என்று ஊடக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் கடந்த மூன்று நாட்களாக பரபரப்பாகப் பேசப்படுகிறத... மேலும் பார்க்க

பிரேசில் அதிபருக்கு போன் செய்த ட்ரம்ப்; `எங்கள் மீதான வரியை குறையுங்கள்' கேட்ட லூலா - அடுத்து என்ன?

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது மட்டுமல்ல, பிரேசில் மீதும் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்திருக்கிறது அமெரிக்கா. இந்த வரி விதிப்பிற்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பைத் தெரிவி... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக முடியுமா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து என்ன?

தமிழ்நாட்டின் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவ... மேலும் பார்க்க

எஸ்-400 ரஷ்ய ஏவுகணையை வாங்கும் இந்தியா; மீண்டும் அமெரிக்காவை பகைக்கிறதா? ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

இந்தியா ரஷ்யாவில் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை வாங்க முடிவு செய்துள்ளது.எஸ்-400 என்றால் என்ன? எஸ்-400 தரையிலிருந்து வானில் ஏவுகணைகளை ஏவும் ஒரு அமைப்பு ஆகும். 2018-ம் ஆண்டு இதை ரஷ்யாவில் இருந்து இந்த... மேலும் பார்க்க

முடக்கப்பட்டதா புதிய தலைமுறை சேனல்?: ``கருத்து சுதந்திர ஒடுக்குமுறை'' -சென்னை பத்திரிகையாளர் மன்றம்

அரசு கேபிள்களில் 'புதிய தலைமுறை' சேனல் ஒளிபரப்பு முடக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக சென... மேலும் பார்க்க