செய்திகள் :

`நெஞ்சுவலி சார்' - போலீஸிடமிருந்து தப்பிச்சென்ற விசாரணை கைதி

post image

தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டி சீப்பர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சங்கர் (25). இவர் திருமணம் முடிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். சுபாஷ் சங்கருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரின் அம்மா மீனாதேவியிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். அவரின் அம்மா பணம் தர மறுத்ததால், அவரை அடித்ததோடு அவதூறாகப் பேசியுள்ளார். மேலும் அரிவாளை எடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனா தேவி அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் இது தொடர்பாக சுபாஷ்சங்கர் மீது கடந்த சனிக்கிழமையன்று வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து செய்து நீதிமன்ற காவலில் வைத்திருந்தனர். இந்நிலையில் சுபாஷ் சங்கர் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்.

போலீசாருடன் சுபாஷ் சங்கர்

உடனே போலீசார் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு இசிஜி உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் செய்யப்பட்டது. மருத்துவமனையில் உள்ள கழிவறைக்குச் சென்று வருவதாக சென்ற சுபாஷ் சங்கர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து அல்லிநகரம் காவல் ஆய்வாளர் இளவரசு மற்றும் எஸ்ஐ கண்ணன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தப்பி ஓடிய சுபாஷ் சங்கரைத் தேடி வருகின்றனர்.

``கட்சி பேதமின்றி சட்டத்தை மட்டுமே நடைமுறைப்படுத்தும் முதல்வர்'' - கரூர் சம்பவம் குறித்து கமல்ஹாசன்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர... மேலும் பார்க்க

கரூர்: 'உடல் பிரச்னையை தீர்க்கிறேன்' - இளம்பெண்ணிடம் ரூ. 5.50 லட்சம் ஏமாற்றிய போலி சாமியார் கைது!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தெப்பக்குளம் தெருவில் உள்ள கருப்பசாமி கோயிலில் கடவூர் தாலுகா, கரிச்சிப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (வயது: 38) என்பவர் பொது மக்களுக்கு குறி சொல்லி வேண்டுதல்களை நிறை... மேலும் பார்க்க

விருதுநகர்: குடும்பப் பிரச்னை; மாமியாரை கிணற்றில் தள்ளிய மருமகன் - போலீஸ் விசாரணை!

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள துய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் மாரிமுத்து. இவர் மானூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த வீரேஷ் இருளாயி தம்பதியினரின் மகளான சத்யாவை திருமணம் செய்து கொண்டா... மேலும் பார்க்க

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; காயங்களுடன் கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள்!

கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குவதும், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்து செல்வதும் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக நாகப்பட்டினம் மீனவர்கள் க... மேலும் பார்க்க

அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பி கொலை -கந்துவட்டி தொழில் செய்த பாஜக பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் பா.ஜ.க-வின் ஒன்றிய செயலாளர். கந்துவட்டி தொழில் செய்து வந்த இவரிடம் நடுவிக்கோட்டையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கந்துவட்டிக்கு கடன் வாங்கியு... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: `பட்டியலின மக்கள் 13 பேர் உயிரிழப்பு' - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு

கரூர், வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி த.வெ.க கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பலரும் பாதிக்கப்பட்டவர்களின... மேலும் பார்க்க