செய்திகள் :

ஜி.டி.நாயுடு: கோவை அவிநாசி சாலை மேம்பாலம் பெயர் சர்ச்சை - அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்

post image

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “திட்டங்களுக்குப் பெயர் வைப்பதில் கெட்டிக்காரர் என முதலமைச்சர் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைத்தவர்களையும், தொண்டர்களையும் மதிக்கக் கூடியவர்.

கோவை - அவிநாசி உயர்மட்ட மேம்பாலம்
கோவை அவிநாசி சாலை மேம்பாலம்

ஆனால், எடப்பாடியார் ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர். முதல்வரைக் குறை கூறுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம், கோவையில் பெரியார், சேலத்தில் பாரதிதாசன், கடலூரில் அஞ்சலையம்மாள், திருச்சியில் காமராசர், நெல்லையில் காயிதே மில்லத் என அனைத்து தலைவர்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன.

எம்ஜிஆர் பெயரில் என்ன செய்து இருக்கின்றீர்கள். அவரது பெயரைச் சொல்ல பயப்படுபவர்கள் எதிர்க்கட்சியினர். ஸ்டாம்ப் சைஸில் கூட எம்ஜிஆர் படத்தைப் போடாதவர்கள். அதிமுக ஆட்சியில் 71 ரயில்வே பாலங்கள் அறிவிக்கப்பட்டன.

எம்ஜிஆர்

அதில் நாங்கள் 36 பாலங்களை நிலம் எடுத்து கட்டி முடித்துள்ளோம். 20 பாலங்களுக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. செம்மொழி பூங்காவை கலைஞர் அறிவித்தபோது, அதைச் செயல்படுத்தாதவர்கள் அதிமுகவினர். பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததற்கு நடுநிலை மக்கள் பாராட்டுகின்றனர்.

இது அதிமுக அறிவித்தத் திட்டமாக இருந்தாலும், 5 சதவிகிதப் பணிகளை மட்டுமே அதிமுக முடித்துவிட்டு சென்றது. திமுக ஆட்சியில் தான் மீதியுள்ள 95 சதவிகித பணிகளை  முடித்து பாலத்தை திறந்துள்ளோம். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது அதிமுக தான். பொதுவாக ஜி.டி.நாயுடு என்றே அவரை அழைப்பார்கள்.

அவிநாசி சாலை மேம்பாலம்

அதன் காரணமாக தான் அந்த பெயர் வைக்கப்பட்டது. சாதிய அடையாளம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஜி.டி.நாயுடு குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.” என்றார்.

பீகார் தேர்தல்: வழக்கறிஞர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள்; வேட்பாளர்களை அறிவித்த பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் முதல் முறையாக போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் ஜன் சூரஜ் என்ற கட்சியை தொடங்கி தேர்தல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நகரங்களின் பெயர்களை உணவுகளுக்கு வைத்து சாப்பிட்ட இந்திய விமானப்படை - மெனு வைரல்!

இந்திய விமானப்படையின் 93வது ஆண்டு விழாவில் வழங்கப்பட்ட இரவு விருந்தின் மெனு வைரலாகி வருகிறது. வழக்கமான விருந்து உணவுகள் என்றால் அதற்கு வித்தியாசமாக பெயரிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த விருந்து எந்த ... மேலும் பார்க்க

தாலிபன்: இந்தியாவில் ஆப்கன் அமைச்சர்; கொடியில் குழப்பம் - வருகையின் பின்னணி என்ன?

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபன் அமைச்சர் அமிர் கான் முத்தாகி டெல்லி வந்தடைந்துள்ளது பிராந்திய அரசியலில் முக்கியமான தருணமாக பார்ப்படுகிறது. ஐநாவின் பாதுகாப்பு கவ... மேலும் பார்க்க

`ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்காக ரூ.100 கோடியில் திட்டம்’ - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனம் சார்பில் சர்வதேச மாநாடு கோவை கொடிசியா வர்த்தக வளாத்தில் நடைபெற்றது. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில... மேலும் பார்க்க

கோவை சிட்டி டு விமான நிலையம் இனி 10 நிமிடங்கள் தான்! - திறக்கப்பட்டது அவிநாசி சாலை மேம்பாலம்

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்ச... மேலும் பார்க்க

தூதுவிடும் எடப்பாடி; மனம் மாறுகிறாரா விஜய்? - அதிமுக - தவெக கூட்டணி உருவாகிறதா?

'எடப்பாடி சூசகம்!'நாமக்கல்லின் குமாரப்பாளையத்தில் அதிமுகவின் பிரசாரக் கூட்டத்தின் போது கூட்டத்தில் தவெக கொடியை பிடித்திருந்தவர்களை பார்த்து, 'கொடி பறக்குதா...அதிமுக வலுவான கூட்டணியை அமைக்கும். பிள்ளைய... மேலும் பார்க்க