செய்திகள் :

மது விருந்தில் தகராறு: பாலிவுட் நடிகர் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நண்பர்

post image

பாலிவுட்டில் ஜுண்ட் என்ற படம் உட்பட ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் பாபு செத்ரி என்ற பிரியன்ஷு க்ஷத்ரியா(21). மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பாபு செத்ரி நேற்று தனது நண்பர் துரு ஷா என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார்.

அவர்கள் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த வீடு ஒன்றில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் உன்னைக் கொலை செய்துவிடுவேன் என்று பாபு மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் அவருடன் இருந்த துரு ஷா தன்னிடம் இருந்த கத்தியால் பாபுவை சரமாரியாகக் குத்தினார்.

படுகொலை
படுகொலை

அதோடு பாபுவின் உடம்பில் வயரால் கட்டிவிட்டு துரு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். சம்பவ இடத்திலேயே பாபு இறந்து போனார். அதிகாலையில் பாபு இறந்து கிடந்ததைப் பார்த்து தெருநாய்கள் குரைக்க ஆரம்பித்தன.

இதனால் உள்ளூர் மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது பாபு கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

உடனே அவர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து செயல்பட்டு பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பாபுவை கொலை செய்த துரு ஷாவை சில மணி நேரத்தில் கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோதுதான் அவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியவந்தது.

மது போதை
மது போதை

இது குறித்து போலீஸார் கூறுகையில்,

"அளவுக்கு அதிகமான போதை மற்றும் முன்பகையால் இப்படுகொலை நடந்திருக்கிறது" என்று தெரிவித்தனர்.

கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாபு தனது 17 வயதில் ரயில் நிலையத்திற்கு அருகில் நிலக்கரி விற்றுக்கொண்டிருந்தபோது அவரை இயக்குனர் நாகராஜ் பார்த்து அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் பாபு மொபைல் திருட்டு, வழிப்பறி போன்ற சிறிய குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்" என்று தெரிவித்தனர்.

தூத்துக்குடி: `அடிக்கடி குரைக்கின்றன'- குடிபோதையில் நாயை கல்லால் தாக்கிக் கொன்ற வாலிபர்!

துாத்துக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். ஆட்டோ டிரைவரான இவர் தனது வீட்டில் இரண்டு நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் இரண்டு நாய்களையும் வீட்டின் முன் சங்கிலியால் கட்டி போட்டி... மேலும் பார்க்க

ஒரே நாளில் 47 மீனவர்கள் சிறை பிடிப்பு; இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை- மீனவர்கள் அதிர்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம் துவங்கி நாகப்பட்டினம் வரை உள்ள 6 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனர். அதிலும் குறிப்பாக வங்க கடலில் உள்ள பாக் நீரிணை ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி: பெண் குழந்தையைக் கடத்த முயற்சி? வடமாநில நபரைக் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள சின்னமோட்டூர் கிராமத்தில், வடமாநில நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்திருக்கிறார். திடீரென அந்த நபர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த தம்பிதுரை ... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான பிரபல `கூலிப்படைத் தலைவன்’ மரணம் - நாகு என்கிற நாகேந்திரனின் பின்னணி

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் நாகு என்கிற நாகேந்திரன். இவர் சிறுவயது முதலே பாக்ஸராக வேண்டும் என்ற கனவோடு வலம்வந்தவர். அதனால் வடசென்னையிலுள்ள பாக்ஸிங் கோச்சிங்கில் சேர்ந்தார். அங்கே விஜி என்ற பாக்... மேலும் பார்க்க

``முறையான சிகிச்சை இல்லை, மகள் மரணம்; அமைச்சருக்கு டெடிகேட் செய்கிறேன்'' - டாக்டரை வெட்டிய தந்தை

கேரள தாமரச்சேரி அரசு மருத்துவமனைகேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியைச் சேர்ந்தவர் அனூப். இவரது 9 வயது மகள் அனயா கடந்த ஆகஸ்ட் மாதம் காய்ச்சல் காரணமாக தாமரச்சேரி அரசு தாலுகா மருத்துவமனையில் சிக... மேலும் பார்க்க

`மோசடி பணம் 60 கோடியை முதலில் செலுத்துங்கள்'- ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல கோர்ட் அனுமதி மறுப்பு

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் அடிக்கடி எதாவது சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். ராஜ் குந்த்ராவும், ஷில்பா ஷெட்டியும் சேர்ந்து டெலிஷாப்பிங் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம... மேலும் பார்க்க