செய்திகள் :

``முறையான சிகிச்சை இல்லை, மகள் மரணம்; அமைச்சருக்கு டெடிகேட் செய்கிறேன்'' - டாக்டரை வெட்டிய தந்தை

post image

கேரள தாமரச்சேரி அரசு மருத்துவமனை

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியைச் சேர்ந்தவர் அனூப். இவரது 9 வயது மகள் அனயா கடந்த ஆகஸ்ட் மாதம் காய்ச்சல் காரணமாக தாமரச்சேரி அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீரியசானதால் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி மரணமடைந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் ப்ரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதித்து இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தனது மகளுக்கு மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால்தான் அவர் இறந்தார் என அனூப் கூறிவந்துள்ளார்.

மேலும் மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க வேண்டும் என தாமரச்சேரி தாலுகா மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கேட்டு வந்துள்ளார்.

அவருக்கு அறிக்கை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று தாமரச்சேரி அரசு தாலுகா மருத்துவமனைக்குச் சென்ற அனூப் கண்காணிப்பாளர் அறைக்கு சென்றுள்ளார்.

காயம் அடைந்த மருத்துவர் விபின்
காயம் அடைந்த மருத்துவர் விபின்

அங்கு இருந்த உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விபின் (36) என்பவரின் தலையில் அரிவாளால் பலமாக வெட்டினார் அனூப்.

டாக்டரை வெட்டும்போது 'என் மகளை நீதானே கொலைசெய்தாய்' எனக்கூறியபடியே வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் விபினை அங்கிருந்தவர்கள் மீட்டனர்.

அவருக்கு அதே மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாமரச்சேரி போலீஸார் அனூப்பை கைது செய்தனர். அவர் மருத்துவரை வெட்டுவதற்கு பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.

தாமரச்சேரி தாலுகா மருத்துவமனையில் கண்காணிப்பாளரை தாக்கும் நோக்கத்தில் சனூப் சென்றதாகவும், அவர் இல்லாததால் டாக்டர் விபினை வெட்டியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டாக்டரை வெட்டியதாக கைதுசெயப்பட்ட அனூப்
டாக்டரை வெட்டியதாக கைதுசெயப்பட்ட அனூப்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அனூப் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் வந்த அனூப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இதை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜிக்கும், சுகாதாரத்துறைக்கும் டெடிகேட் செய்கிறேன்" என தெரிவித்தார்.

இதுபற்றி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "தாமரச்சேரி தாலுகா மருத்துவமனையில் மருத்துவர் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது மனித மனசாட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. தாக்குதல் நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி மருத்துவரை வெட்டிய தந்தையின் செயல் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`மோசடி பணம் 60 கோடியை முதலில் செலுத்துங்கள்'- ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல கோர்ட் அனுமதி மறுப்பு

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் அடிக்கடி எதாவது சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். ராஜ் குந்த்ராவும், ஷில்பா ஷெட்டியும் சேர்ந்து டெலிஷாப்பிங் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம... மேலும் பார்க்க

தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - தஷ்வந்த் விடுவித்த உச்ச நீதிமன்றம்

சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் நீதிமன்றத்தில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி ... மேலும் பார்க்க

கேரளா: தெருநாய் தொல்லை குறித்து விழிப்புணர்வு நாடகம்; நடித்துக்கொண்டிருந்தவரை கடித்த தெருநாய்

தெருவில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் நடக்கும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. கேரள மாநிலத்தில் தெருநாய்களால் சில குழந்தைகள் இறந்த நிகழ்வுகளும் அரங்கேறின. அதைத் தொடர... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: "இரவானால் மனைவி பாம்பாக மாறி என்னைக் கடிக்கிறார்" - வைரலான கணவனின் புகார்

உத்தரப்பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் மாவட்ட குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட நீதிபதியிடம் கொடுத்திருக்கும் புகார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சிதாப்பூர் மாவட்டத்தில் உள்ள லோத்ஷா ... மேலும் பார்க்க

மபி, ராஜஸ்தானில் இருமல் மருந்தால் 16 குழந்தைகள் மரணம்; தமிழக மருந்து கம்பெனிதான் காரணமா?

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதுவரை இரண்டு மாநிலத்திலும் சேர்த்து 16 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து இறந்துள்ளனர். அவர்க... மேலும் பார்க்க

பெங்களூரு: "உறவுக்கு மதிப்பு கொடுத்தேன்; ஆனால்" - திருமண ஆசையில் ரூ.2.3 கோடியை இழந்த 59 வயது ஆசிரியை

ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதிய அளவுக்குப் பயனளிக்கவில்லை. திருமண ஆசை, பங்கு வர்த்தகம், டிஜிட்டல் கைது என்று எத... மேலும் பார்க்க