செய்திகள் :

Coldrif இருமல் மருந்து: 20 குழந்தைகள் உயிரிழப்பு - கோல்ட்ரிஃப் நிறுவனத்தின் உரிமையாளர் கைது

post image

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் 20 குழந்தைகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நடத்திய ஆயவில் கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துதான் குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

வண்ணப்பூச்சுகள், பிரேக் திரவங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் 'Diethylene Glycol (DEG)', 'Ethylene Glycol (EG)' நச்சுகள் கோல்ட்ரிஃப் மருந்தில் கலந்திருப்பதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் ஆய்வில் வெளியாகியிருக்கின்றன.

கோல்ட்ரிஃப் (Coldrif)
கோல்ட்ரிஃப் (Coldrif)

இந்த கோல்ட்ரிஃப் (Coldrif) தமிழ்நாட்டைச் சேர்ந்த காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் 'Sresan Pharmaceuticals' என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தின் இருமல் மருந்துதான் என்று அந்நிறுவனத்தில் விசாரணையும், ஆய்வும் நடைபெற்று வருகிறது.

இதனால் மத்தியப் பிரதேச அரசு கோல்ட்ரிஃப் விற்பனையையும் அந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து மருந்துகளையும் தடை செய்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் அமைச்சர் மா.சுப்பிரமணியம், 'இந்த கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்தைப் பயன்படுத்த வேண்டாம். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்து நிறுவனம்
கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்து நிறுவனம்

இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வந்த ''Sresan Pharmaceuticals' மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டிருக்கிறார். மத்தியப் பிரதேச அரசும், தமிழ்நாடு அரசும் சேர்ந்து நடத்திய இந்த காவல் விசாரணையிலும், மருந்துகளின் சாம்பிள்களை எடுத்து ஆய்வு செய்து நச்சுத் தன்மை இருப்பதை உறுதி செய்தும் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர்.

'திண்டுக்கல்லில் சில பணிகளில் தொய்வு இருக்கிறது' - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் ... மேலும் பார்க்க

ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரால் புற்றுநோய் பாதிப்பா? - அமெரிக்க நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரைப் பயன்படுத்தி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு $966 மில்லியன் (இந்திய ரூபாயில் சுமார் 85,790 கோடி ரூபாய்) வழங்க J&J நிறுவனத்திற்கு உ... மேலும் பார்க்க

`அவிநாசி சாலை To ஜி.டி நாயுடு மேம்பாலம்' - 18 Years போட்டோ ரீவைண்ட்!!

அவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைஅவிநாசி சாலைமேம்பாலம் கட்டுமான பணிகள் அவிநாசி சாலைஅவிநாசி சாலைமேம்பாலம் கட்டுமான பணிகள் மேம்... மேலும் பார்க்க

``அமித் ஷாவிடம் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' - மம்தா பானர்ஜி சொல்வதென்ன?

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் பெய்த கனமழையால் வடக்கு வங்காளம் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்வையிட்டுவிட்டு கொல்கத்தா திரும்பிய முதல்வர் மம்தா பானர்ஜி, செய்தியாளர் சந்திப்பில் 'அமித் ஷா... மேலும் பார்க்க

"2014-ல் நான் கண்ட கனவு இதுதான்" - பிரதமர் மோடியின் உரை

மராட்டிய மாநிலம், நவிமும்பையில் ரூ.19650 கோடி செலவில் தாமரை வடிவில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையடுத்துப் பேசிய பிரதமர் மோடி, "ஹவாய் செருப்புப் போடும் சாதாரண ம... மேலும் பார்க்க

'zoho mail'க்கு மாறிய அமித் ஷா; என்ன ஸ்பெஷல், என்னனென்ன வசதி இருக்கின்றன?!

பாஜக-வைச் சேர்ந்த உள்துறை அமித் ஷா 'ZOHO' நிறுவனத்தின் 'zoho mail'க்கு மாறியுள்ளதாகக் கூறியிருக்கிறார். இதன் பின்னணி என்ன? அதில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பது குறித்து பார்க்கலாம். பின்னணிட்ரம்ப் தலைமையி... மேலும் பார்க்க