செய்திகள் :

மும்பை: பாலத்தின் தடுப்பை உடைத்து கடலுக்குள் பாய்ந்த கார்; குடிபோதையில் கார் ஓட்டிய நபர் மீது வழக்கு

post image

மும்பையின் மேற்கு பகுதியை தென்பகுதியோடு இணைக்கும் விதமாக கடற்கரையையொட்டி கடற்கரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கடலில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு இந்தக் கடல் பாலத்தில் பதிவாலா (29) என்பவர் தனது காரில் வேகமாகச் சென்று கொண்டிருந்தார். ஆனால் திடீரென கார் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு மேம்பாலத்தின் தடுப்பையும் உடைத்துக்கொண்டு கடலுக்குள் சென்றது.

கடற்பகுதி மணற்பாங்கான இடமாக இருந்தது. கார் கடலுக்குள் மூழ்கிய நிலையில் இருந்தது. காருக்குள் இருந்த பதிவாலா காரில் இருந்து வெளியில் வந்தார்.

ஆனால் அவருக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை. கார் மேம்பாலத்தில் இருந்து கடலுக்குள் விழுந்ததை அங்குப் பாதுகாப்புப் பணியில் நின்ற காவலர்கள் சுஹாஸ் மற்றும் பாண்டுரங்க் பார்த்தனர். அவர்கள் ஓடி வந்து பார்த்தபோது காரில் இருந்த நபர் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்தார்.

மீட்ட காவலர்கள்
மீட்ட காவலர்கள்

உடனே அவர்கள் இரண்டு பேரும் கடலுக்குள் குதித்து அவரைக் காப்பாற்றினர். உள்ளூர் மக்களின் துணையோடு காரில் இருந்த நபர் கயிறு கட்டி மேலே தூக்கப்பட்டார். அவர் கடல் தண்ணீரை அதிக அளவில் குடித்து இருந்தார். அவரை கடல் பாலத்திற்குக் கொண்டு வந்தபோது அவரால் சரியாகப் பேச முடியவில்லை. ஆனால் மேலிருந்து கீழே விழுந்ததில் அவருக்குப் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரது ரத்த மாதிரியை எடுத்து சோதித்தபோது அவர் மது அருந்திவிட்டு கார் ஓட்டியது தெரிய வந்தது. இதையடுத்து பொது சொத்துக்குச் சேதம் ஏற்படுத்தியது, மது அருந்திவிட்டு கார் ஓட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து பதிவாலாவின் குடும்பத்தினர் கூறுகையில், ''பதிவாலா காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் மீது மற்றொரு பி.எம்.டபிள்யூ கார் இடித்துக்கொண்டது. இதனால் பதிவாலாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை'' என்று தெரிவித்தனர்.

தென்காசி: காதலுடன் சென்ற சிறுமி விபத்தில் பலி; உறவினர்கள் போராட்டம்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் என்பவரது 16 வயது மகள் பதினோராம் வகுப்பு படித்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மரத்தொழில் செய்து வந்த ரமேஷ் என்ற இளைஞரைக் காதலித்த... மேலும் பார்க்க

சேலம்: சாலையைக் கடக்க முயன்ற தலைமைக் காவலர்; லாரி மோதி பலியான சோகம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (40) என்பவர் சேலம் மாநகர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள்... மேலும் பார்க்க

``உங்க பணம், 1 ரூபாய் கூட குறையாது'' - விபத்தில் சிக்கியவர் குடும்பத்தை நெகிழ வைத்த டி.எஸ்.பி!

தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (44). இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் சந்திராவுடன் வசித்து வருகிறார். ராஜாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தனக்க... மேலும் பார்க்க

``சாப்பிட வந்தபோது என் தாயை இழந்துவிட்டேன்'' - ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனை தீவிபத்து; 8 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தீவிபத்து ஏற்... மேலும் பார்க்க

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து - பதறிய மக்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மயிலாடுதுறை கிராமத்தில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீப... மேலும் பார்க்க

விழுப்புரம்: நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்… மூன்று இளைஞர்கள் உயிரிழந்த பின்னணி என்ன?

சென்னையைச் சேர்ந்த அஜீஸ் என்ற 25 வயது இளைஞர், பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆயுத பூஜைக்காக விடப்பட்ட தொடர் விடுமுறையில் கேரளாவுக்குச் செல்ல முடிவெடுத்த அஜீஸ், சென்ன... மேலும் பார்க்க