செய்திகள் :

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து - பதறிய மக்கள்

post image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மயிலாடுதுறை கிராமத்தில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீபாவளி நெருங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் சிவகாசி பகுதியில் பட்டாசு விற்பனை ஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்கு வந்து பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று சிவகாசி அருகே உள்ள மயிலாடுதுறை என்கின்ற கிராமத்தில் செல்வகுமார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் பட்டாசு விற்பனைக்கான சோதனை நடத்தும் போது, பட்டாசு வெடித்து சிதறியதால் பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. வெடிச் சத்தத்தால் சுற்றுவட்டார மக்கள் அச்சத்துடன் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

பட்டாசு கடையில் வெடி விபத்து

தகவல் கிடைத்ததும் சிவகாசியிலிருந்து தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வெடி விபத்தால் அருகிலுள்ள பட்டாசு கடைகளிலும் அபாயம் நிலவியது. இருந்தும் அருகிலுள்ள கடைகளில் சிறிது சேதமடைந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்: நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்… மூன்று இளைஞர்கள் உயிரிழந்த பின்னணி என்ன?

சென்னையைச் சேர்ந்த அஜீஸ் என்ற 25 வயது இளைஞர், பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆயுத பூஜைக்காக விடப்பட்ட தொடர் விடுமுறையில் கேரளாவுக்குச் செல்ல முடிவெடுத்த அஜீஸ், சென்ன... மேலும் பார்க்க

Ennore: சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து; வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலி

சென்னை அருகே இருக்கும் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அனல் மின் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரு... மேலும் பார்க்க

கரூர்: ``நிபந்தனையை மீறி செயல்பட்டார் விஜய்'' - காவல்துறையின் FIR சொல்வது என்ன?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பரப்புரைதவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தி... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: 41 பேர் பலி, கதறி அழுத உறவுகள்; நெஞ்சை உலுக்கிய சோகக் காட்சிகள்

கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் 41 பேர் பலிகரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம் வனப்பகுதியில் 3 வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் காட்டுத்தீ 3 வது நாளாக எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்-... மேலும் பார்க்க

மும்பை: கடல் சுரங்கப்பாதையில் தீப்பிடித்து எரிந்த கார்; புகை மண்டலத்தால் ஸ்தம்பித்த போக்குவரத்து

மும்பையின் மேற்கு பகுதியை தென்பகுதியோடு இணைக்கும் விதமாக கடற்கரையொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் போக்குவரத்திற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் கடலி... மேலும் பார்க்க