செய்திகள் :

மும்பை: கடல் சுரங்கப்பாதையில் தீப்பிடித்து எரிந்த கார்; புகை மண்டலத்தால் ஸ்தம்பித்த போக்குவரத்து

post image

மும்பையின் மேற்கு பகுதியை தென்பகுதியோடு இணைக்கும் விதமாக கடற்கரையொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் போக்குவரத்திற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இச்சாலையில் கடலில் சுரங்க சாலையும் கட்டப்பட்டுள்ளது. இந்தச் சுரங்க சாலையில் இன்று காலை கார் ஒன்று திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இதனால் சுரங்கம் முழுக்க புகைமண்டலமாக மாறியது.

தார்டுதேவ் நுழைவு வாயில் பகுதியில் ஏற்பட்ட இத்தீவிபத்து காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுரங்கத்தின் இரு மார்க்கத்திலும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பற்றி எரிந்த கார்
பற்றி எரிந்த கார்

வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன. சுரங்கத்தில் காரில் பற்றிய தீயை தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு அணைத்தனர். பிரீஜ் கேண்டி சுரங்க நுழைவு வாசல் வழியாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உள்ளே சென்று தீயை அணைத்தன. காரில் பற்றிய தீ அருகில் நின்ற மற்ற கார்களுக்குப் பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

இத்தீவிபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இத்தீவிபத்து காரணமாக கடற்கரை சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் எங்கேயும் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்ற வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக பரவி இருக்கிறது.

புகை முற்றிலும் வெளியேறிய பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

சென்னை: பிரபல மாலில் லிஃப்ட் விபத்து; உடல் நசுங்கி ஊழியர் பலி - அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூவின் லிஃப்டில் சிக்கி ஊழியர் ஒருவர் இன்று உயிரிழந்திருக்கிறார். ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழ... மேலும் பார்க்க

நெல்லை: ஒரே நாளில் 14 பேரை கடித்த வளர்ப்பு நாய்; உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் சமீப காலமாக நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் குறைந்துள்ளது. இதனால், நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகள், தெருக்களில் நாய்கள் க... மேலும் பார்க்க

ரயில் மோதி இறந்த பெண்; வேடிக்கை பார்க்கச் சென்ற நபரும் உயிரிழந்த பரிதாபம் - குளித்தலை சோகம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்கிளி (வயது 52). இவர், கரூர் மாவட்டம், சிந்தலவாடியில் உள்ள தன் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், லாலாபேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே... மேலும் பார்க்க

பாம்பன் பாலத்தில் சென்ற ரயில்; கடலில் தவறி விழுந்த வாலிபர்... காயம் இன்றி உயிர் தப்பிய அதிசயம்!

மதுரை பரவை பகுதியை சேர்ந்த இளைஞர் வரதராஜன். வங்கி ஊழியரான இவர், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய நேற்று காலை மதுரையில் இருந்து ராமேசுவரம் வந்துள்ளார். மதுரை பாசஞ்சர் ரயிலில் ராமேசுவரம் வ... மேலும் பார்க்க

4-வது மாடியிலிருந்து விழுந்து பிழைத்த குழந்தை; டிராபிக்கில் 4 மணி நேரம் சிக்கியதால் உயிரிழப்பு

புல் தடுக்கி விழுந்து உயிரிழந்தவர்களும் உண்டு. அதே சமயம் மிகப்பெரிய விபத்தில் சிக்கியவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவமும் நடந்துள்ளது.மும்பையில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதி... மேலும் பார்க்க

கேரளா: இடுக்கி ரிசார்ட் கட்டுமானத்தில் விபத்து; மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி | Photo Album

தொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிகேரளாவிலும் தமிழ்நாட்டிலும் வாக்குரிமை..... மேலும் பார்க்க