செய்திகள் :

ரயில் மோதி இறந்த பெண்; வேடிக்கை பார்க்கச் சென்ற நபரும் உயிரிழந்த பரிதாபம் - குளித்தலை சோகம்

post image

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்கிளி (வயது 52). இவர், கரூர் மாவட்டம், சிந்தலவாடியில் உள்ள தன் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், லாலாபேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளம் ஓரமாக நடந்து சென்றபோது, திருச்சி-ஈரோடு வரை செல்லும் பாசஞ்சர் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கரூர் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அந்த பெண்ணின் உடலைக் காணச் சென்றுள்ளனர். அப்போது, லாலாபேட்டை அருகே உள்ள புனவாசிப்பட்டியை சேர்ந்த ராஜலிங்கம் (வயது 54) என்ற நபரும் வேடிக்கைப் பார்க்க வந்துள்ளார்.

உயிரிழந்த அன்னக்கிளி
உயிரிழந்த அன்னக்கிளி

காது கேட்காத, வாய்பேச முடியாத இவர் விபத்தில் இறந்த பெண்ணைப் பார்த்துவிட்டு , பின்னர் தண்டவாளத்தில் லாலாபேட்டை ரயில்வே நிலையத்தை நோக்கி வந்த போது திருச்சி- பாலக்காடு பயணிகள் விரைவு ரயில் மோதியதில், இவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். இதனையடுத்து, ரயில் விபத்துகளில் பலியான இருவரது உடலையும் கைப்பற்றிய கரூர் ரயில்வே போலீஸார், அவர்களின் உடல்களை உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் மோதி பெண் பலியான சம்பவத்தை பற்றி கேள்விப்பட்டு அங்கே வேடிக்கை பார்க்க சென்ற நபரும் மற்றொரு ரயில் மோதி பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பன் பாலத்தில் சென்ற ரயில்; கடலில் தவறி விழுந்த வாலிபர்... காயம் இன்றி உயிர் தப்பிய அதிசயம்!

மதுரை பரவை பகுதியை சேர்ந்த இளைஞர் வரதராஜன். வங்கி ஊழியரான இவர், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய நேற்று காலை மதுரையில் இருந்து ராமேசுவரம் வந்துள்ளார். மதுரை பாசஞ்சர் ரயிலில் ராமேசுவரம் வ... மேலும் பார்க்க

4-வது மாடியிலிருந்து விழுந்து பிழைத்த குழந்தை; டிராபிக்கில் 4 மணி நேரம் சிக்கியதால் உயிரிழப்பு

புல் தடுக்கி விழுந்து உயிரிழந்தவர்களும் உண்டு. அதே சமயம் மிகப்பெரிய விபத்தில் சிக்கியவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவமும் நடந்துள்ளது.மும்பையில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதி... மேலும் பார்க்க

கேரளா: இடுக்கி ரிசார்ட் கட்டுமானத்தில் விபத்து; மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி | Photo Album

தொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிகேரளாவிலும் தமிழ்நாட்டிலும் வாக்குரிமை..... மேலும் பார்க்க

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பெண் பலி; போலீஸ் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள கங்கர்செவல் சத்திரப்பட்டி கிராமத்தில் திவ்யா பைரோடெக் எனும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் ஒருவர் உயிரிழ... மேலும் பார்க்க

``தொந்தரவு செய்ய விரும்பவில்லை'' - மனநிலை பாதித்த மகனுடன் 13-வது மாடியில் இருந்து குதித்த தாய்

டெல்லி அருகிலுள்ள நொய்டாவில் சாக்‌ஷி சாவ்லா (37) வசித்து வந்தார். அவரது கணவர் தர்பன் சாவ்லா ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் 11 வயது மகன் உள்ளான். ஆனால் அவர் மனநிலை பாதிப்பால் அவதிப... மேலும் பார்க்க

கர்நாடகாவில் கோர விபத்து; விநாயகர் சிலை ஊர்வலத்தில் லாரி மோதியதில் 8 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று (செப்டம்பர்.12) இர... மேலும் பார்க்க