செய்திகள் :

``தொந்தரவு செய்ய விரும்பவில்லை'' - மனநிலை பாதித்த மகனுடன் 13-வது மாடியில் இருந்து குதித்த தாய்

post image

டெல்லி அருகிலுள்ள நொய்டாவில் சாக்‌ஷி சாவ்லா (37) வசித்து வந்தார். அவரது கணவர் தர்பன் சாவ்லா ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் 11 வயது மகன் உள்ளான். ஆனால் அவர் மனநிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

மகனை கடந்த 10 ஆண்டுகளாக சாக்‌ஷிதான் போராடி கவனித்து வந்தார். அடிக்கடி அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதும் அவரே. இதனால் சாக்‌ஷி மனவருத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று, தர்பன் வீட்டின் மற்றொரு அறையில் இருந்தபோது, சாக்‌ஷி தனது மகனுடன் பால்கனி வழியாக 13-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த தர்பன், மனைவியும் மகனும் கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இருவர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

சாக்‌ஷி தற்கொலை செய்ய முன்பு தனது கணவருக்கு ஒரு கடிதம் எழுதிக் கிட்டு இருந்தார். அதில் அவர்:

"நாங்கள் இந்த உலகத்தை விட்டுச் செல்கிறோம். மன்னித்து விடுங்கள். மீண்டும் உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எங்களால் உங்கள் வாழ்க்கை சீரழிந்துவிட்டது. எங்களது மரணத்திற்கு யாரும் பொறுப்பு இல்லை." என்று தெரிவித்துள்ளார்.

போலீசாரின் விசாரணையில், காலை 9 மணிக்கு தர்பன் தனது மனைவியிடம் மகனுக்கு மாத்திரைகள் கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் காலை 10 மணிக்கு 13-வது மாடியில் இருந்து அவர்கள் கீழே குதித்திருந்தனர் என்று தெரிய வந்தது.

மன அழுத்தம் காரணமாக சாக்ஷி தற்கொலை செய்திருக்கலாம் என்று துணை போலீஸ் கமிஷனர் சக்தி தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கர்நாடகாவில் கோர விபத்து; விநாயகர் சிலை ஊர்வலத்தில் லாரி மோதியதில் 8 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று (செப்டம்பர்.12) இர... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் இருந்து குதித்த பாலிவுட் நடிகை கரிஷ்மா காயம்; மருத்துவமனையில் சிகிச்சை

பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். அவர் ராகினி எம்.எம்.எஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். கரிஷ்மா சர்மா மும்பை சர்ச்கேட்டில் நடக்க இருந்த படப்பிடிப்பு ஒன்... மேலும் பார்க்க

திருப்பூர்: போதையில் காரை ஓட்டி விபத்து; முதியவர் உயிரிழப்பு.. திமுக பேரூராட்சித் தலைவரிடம் விசாரணை!

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் இன்று மாலை வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சாம... மேலும் பார்க்க

கடலூர்: ஒன்றரை வயது குழந்தையை காவு வாங்கிய தண்ணீர் வாளி! – சோகத்தில் முடிந்த விளையாட்டு

கடலூர் குமாரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் – ஞானசவுந்தரி தம்பதிக்கு, கடந்த 2023-ம் ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு குணஸ்ரீ, குகஸ்ரீ என பெயர் வைத்து மகிழ்ந்தனர் சிவசங்கரும், ஞ... மேலும் பார்க்க

நீலகிரி: ஊட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விழிப்புணர்வு ஒத்திகை | Photo Album

Ooty: ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா? எமரால்டு ஏரியை மறந்துடாதீங்க.. சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,... மேலும் பார்க்க

மேடையில் சுருண்டு விழுந்து இறந்த சட்டசபை ஊழியர்; அரசு ஓணம் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தின் வசந்தவிழா என்பதால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து தரப்பினரும் அத்தப்பூ கோலம... மேலும் பார்க்க