செய்திகள் :

ஓடும் ரயிலில் இருந்து குதித்த பாலிவுட் நடிகை கரிஷ்மா காயம்; மருத்துவமனையில் சிகிச்சை

post image

பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். அவர் ராகினி எம்.எம்.எஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். கரிஷ்மா சர்மா மும்பை சர்ச்கேட்டில் நடக்க இருந்த படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்டார்.

இதற்காக அவர் புறநகர் ரயிலில் ஏறிச் செல்ல முடிவு செய்தார். அவருடன் அவரது தோழிகளும் இருந்தனர். அவர்கள் ரயில் நிலையத்தில் நின்றபோது சர்ச்கேட் செல்லும் ரயில் வந்தது. உடனே கரிஷ்மா சர்மா ரயிலில் முதல் ஆளாக ஏறிவிட்டார்.

சில நொடிகள் மட்டுமே நிற்கும் புறநகர் ரயில் உடனே கிளம்பியது. ஆனால் ரயிலில் கரிஷ்மா சர்மாவின் தோழிகள் ஏறவில்லை. ரயில் கிளம்பிய பிறகுதான் கரிஷ்மா சர்மா தனது தோழிகள் ரயிலில் ஏறவில்லை என்பதை கவனித்தார்.

கரிஷ்மா சர்மா

உடனே அவர் சுதாரித்துக்கொண்டு ரயிலில் இருந்து கீழே குதித்தார். இதனால் அவர் ரயிலில் இருந்து பின்புறமாக கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டது. கரிஷ்மாவை அவரது தோழிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் இப்போது சிகிச்சை எடுத்து வருகிறார்.

இது தொடர்பாக கரிஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதோடு மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இரண்டு நாட்களாக கடுமையான வலி இருப்பதாகவும், தலை மற்றும் முதுகு பகுதியில் காயம் மற்றும் வீக்கம் ஏற்பட்டு இருப்பதாகக் கரிஷ்மா தெரிவித்துள்ளார். அவருக்கு டாக்டர்கள் சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்துள்ளனர். கரிஷ்மாவின் தோழிகளும் நடந்த சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

கரிஷ்மா சர்மா ரியாலிட்டி ஷோக்களில் அதிக அளவில் பங்கேற்று வருகிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

திருப்பூர்: போதையில் காரை ஓட்டி விபத்து; முதியவர் உயிரிழப்பு.. திமுக பேரூராட்சித் தலைவரிடம் விசாரணை!

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் இன்று மாலை வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சாம... மேலும் பார்க்க

கடலூர்: ஒன்றரை வயது குழந்தையை காவு வாங்கிய தண்ணீர் வாளி! – சோகத்தில் முடிந்த விளையாட்டு

கடலூர் குமாரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் – ஞானசவுந்தரி தம்பதிக்கு, கடந்த 2023-ம் ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு குணஸ்ரீ, குகஸ்ரீ என பெயர் வைத்து மகிழ்ந்தனர் சிவசங்கரும், ஞ... மேலும் பார்க்க

நீலகிரி: ஊட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விழிப்புணர்வு ஒத்திகை | Photo Album

Ooty: ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா? எமரால்டு ஏரியை மறந்துடாதீங்க.. சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,... மேலும் பார்க்க

மேடையில் சுருண்டு விழுந்து இறந்த சட்டசபை ஊழியர்; அரசு ஓணம் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தின் வசந்தவிழா என்பதால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து தரப்பினரும் அத்தப்பூ கோலம... மேலும் பார்க்க

கரூர்: மூளைச்சாவு அடைந்த சிறுமி; உறுப்பு தானம் செய்து 5 பேரின் உயிரைக் காத்த பெற்றோர்; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சீரங்கவுண்டனூரைச் சேர்ந்தவர்கள் ரவி, செல்வநாயகி தம்பதியினர். இவர்களுக்கு, தன்யா, ஓவியா (வயது 7) என்று இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் ஓசூர் பக... மேலும் பார்க்க

சென்னை: விஷப்பூச்சி கடித்து இளம் பெண் மரணம்? காவல்துறை சொல்வது என்ன?

சென்னையில் விஷப் பூச்சி கடித்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, ஆவடி, கண்ணப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் சர்மிளா (19).கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29ம் தேதி) ... மேலும் பார்க்க