செய்திகள் :

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

post image

தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று(செப். 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நேற்று (செப். 11) தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செப். 12) காலை 8.30 மணியளவில் வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் அடுத்த இரு தினங்களில் கடந்து செல்லக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் இன்று(செப். 12) தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்ந்து செப். 16 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்றும் நாளையும்(செப். 12, 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் வருகிற செப். 16 வரை சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

IMD says that heavy rain is likely to occur in Mayiladuthurai, Cuddalore and Villupuram districts of Tamil Nadu today (Sep. 12).

வனத்துறை அலுவலகத்துக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா? மாநில மனித உரிமை ஆணையம்

நெல்லை: வனத்துறை அலுவலகத்திற்கு ஒரு நீதி, கிராம மக்களுக்கு ஒரு நீதியா? என மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது, அடிப்படை வசத... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலைய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (11-09-2025) தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கார... மேலும் பார்க்க

செப். 16ல் சென்னையில் பாஜகவின் முக்கிய ஆலோசனை கூட்டம்!

சென்னையில் பாஜக மையக்குழு கூட்டம் வருகிற செப். 16 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈ... மேலும் பார்க்க

உங்க விஜய் நா வரேன்! சுற்றுப் பயணத்துக்கான தவெக லோகோ வெளியீடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான லோகோவில் உங்க விஜய் நா வரேன் என்ற வாசகத்துடன் அக்கட்சி வெளியிட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தேர்தல் சுற்றுப் பயணம், திருச்சி... மேலும் பார்க்க

சுரங்கம் தோண்ட பொதுமக்கள் கருத்து தேவையில்லை! மத்திய அரசுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

டங்க்ஸ்டன் மற்றும் அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கங்களுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன... மேலும் பார்க்க

உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும்!

உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க