செய்திகள் :

நேபாள வன்முறை: மேற்கு வங்கம் வழியாக நாடு திரும்பிய 2,000 இந்தியர்கள்!

post image

நேபாளத்தில் வன்முறை வெடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து சுமார் 2,000 இந்தியர்கள் மேற்கு வங்கத்தின் பனிடான்கி எல்லை வழியாகத் தாயகம் திரும்பியுள்ளனர்.

நேபாள நாட்டில் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டது மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து, ஜென் - ஸி என்றழைக்கப்படும் இளம்தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த செப்.9 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தில், அரசுப் படைகள் நடத்திய தாக்குதல்களினால் வன்முறை வெடித்தது. இதனால், பிரதமர் சர்மா ஓலி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டு, நிர்வாகம் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டின் முக்கிய அரசு கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களினால், விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், நேபாளத்தில் இருந்த தொழிலாளிகள் மற்றும் சுற்றுலா சென்றிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 3 நாள்களில் மட்டும் மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியில் உள்ள பனிடாங்கி எல்லை வழியாக நேபாளத்தில் இருந்து சுமார் 2,000 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்துடன், நேபாளத்தில் சிக்கியுள்ள தெலுங்கு மக்களை மீட்க ஆந்திரப் பிரதேச மாநில அரசு சிறப்பு விமானங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நேபாள வன்முறையை ஆவணமாக்கிய பிரிட்டன் காணொளிப் பதிவர்..! வரலாறான சுற்றுப் பயணம்!

Amid the outbreak of violence in Nepal, around 2,000 Indians from the country have returned home via the Panitanki border in West Bengal.

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயின்று வந்த மாணவி... மேலும் பார்க்க

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து உயர்நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயிலில் மோரீஷஸ் பிரதமர் வழிபாடு!

மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராமகூலம் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். இந்தியா உடனான நல்லுறவை மேலும் விரிவாக்கும் நோக்கில், மோரீஷஸ் பிரதமா் ராமகூலம் 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்குக்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ விடியோவால் சர்ச்சை! காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள சித்திரிப்பு விடியோவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், 2022 ஆம் ஆண்டில் காலமானார். இந்த நிலையில், அவ... மேலும் பார்க்க

கூகுள் செய்யறிவு பயன்பாட்டில் ஹிந்தி அறிமுகம்!

தேடுபொறி தளமான கூகுள் தன்னுடைய செய்யறிவு பயன்பாட்டில் இந்தியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஏஐ மோட், ஜெமினி 2.5 என்ற இயங்குதளத்தால் இயக்கப்படுகிறது.கூகுள் தேடுபொறி இணையதளம், முதலில் கடந்த மார்ச் மா... மேலும் பார்க்க

ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நிறுவனர் ஜகதீப் சோக்கர் காலமானார்!

புது தில்லி: கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் இணை நிறுவனருமான ஜகதீப் எஸ் சோக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 81.நாட்டின் தேர்தல்களில் நடக்கும் முறைகேடுகள... மேலும் பார்க்க