செய்திகள் :

அயோத்தி ராமர் கோயிலில் மோரீஷஸ் பிரதமர் வழிபாடு!

post image

மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராமகூலம் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.

இந்தியா உடனான நல்லுறவை மேலும் விரிவாக்கும் நோக்கில், மோரீஷஸ் பிரதமா் ராமகூலம் 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை வந்தார்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய அவா் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசிக்குப் புதன்கிழமை மாலை வந்தாா். வாரணாசியில் பிரதமர் மோடியுடன் அவா் வியாழக்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அயோத்தி கோயிலில் மோரீஷஸ் பிரதமர் வழிபாடு

மோரீஷஸ் பிரதமர் தனது மனைவி வீனா ராம்கூலத்துடன் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, கோயில் கட்டுமானம் குறித்தும் கேட்டறிந்தார். மோரீஷஸ் அதிகாரிகள் அடங்டிகய 30 பேர் கொண்டு குழு அவருடன் வந்தனர்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகைதந்த பிரதமர் ராம்கூலத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். மோரீஷஸ் பிரதமரை வரவேற்க விமான நிலையத்திலிருந்து ராமர் கோயிலுக்குச் செல்லும் பாதை வரை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மோரீஷஸ் பிரதமரை வரவேற்கும் வகையில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளும் வழிநெடுக ஒட்டப்பட்டிருந்தன.

முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் ராமகூலத்தை வரவேற்க உத்தரப் பிரதேச அமைச்சரவை அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி மற்றும் உள்ளூர் மக்கள் திரண்டனர்.

பிரதமர் ராமகூலம் முன்னதாக வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றார். மோரீஷியஸ் பிரதமர்செப். 9 முதல் 16 வரை இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வருகை தந்துள்ளார்.

Mauritius Prime Minister Navinchandra Ramgoolam on Friday offered prayers at the Ram temple here.

இதையும் படிக்க:வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு!

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயின்று வந்த மாணவி... மேலும் பார்க்க

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து உயர்நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: மேற்கு வங்கம் வழியாக நாடு திரும்பிய 2,000 இந்தியர்கள்!

நேபாளத்தில் வன்முறை வெடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து சுமார் 2,000 இந்தியர்கள் மேற்கு வங்கத்தின் பனிடான்கி எல்லை வழியாகத் தாயகம் திரும்பியுள்ளனர். நேபாள நாட்டில் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டது ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ விடியோவால் சர்ச்சை! காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள சித்திரிப்பு விடியோவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், 2022 ஆம் ஆண்டில் காலமானார். இந்த நிலையில், அவ... மேலும் பார்க்க

கூகுள் செய்யறிவு பயன்பாட்டில் ஹிந்தி அறிமுகம்!

தேடுபொறி தளமான கூகுள் தன்னுடைய செய்யறிவு பயன்பாட்டில் இந்தியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஏஐ மோட், ஜெமினி 2.5 என்ற இயங்குதளத்தால் இயக்கப்படுகிறது.கூகுள் தேடுபொறி இணையதளம், முதலில் கடந்த மார்ச் மா... மேலும் பார்க்க

ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நிறுவனர் ஜகதீப் சோக்கர் காலமானார்!

புது தில்லி: கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் இணை நிறுவனருமான ஜகதீப் எஸ் சோக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 81.நாட்டின் தேர்தல்களில் நடக்கும் முறைகேடுகள... மேலும் பார்க்க