செய்திகள் :

பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ விடியோவால் சர்ச்சை! காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்!

post image

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள சித்திரிப்பு விடியோவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், 2022 ஆம் ஆண்டில் காலமானார். இந்த நிலையில், அவர்போல சித்திரித்த விடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டு பாஜகவை விமர்சித்துள்ளது.

விடியோவில், `தேர்தல்களில் வாக்குகளைப் பெற, தன்னைப் பயன்படுத்துவதாக, பிரதமர் மோடியை ஹீராபென் மோடி விமர்சிப்பதுபோல’ வெளியாகியது.

பிரதமர் மோடியின் தாயார் குறித்த இந்த சித்திரிப்பு விடியோவுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சித்திரிப்பு விடியோ குறித்து பாஜக கூறுகையில்,

``பிரதமர் மோடியின் தாயை காங்கிரஸ் அவமதிப்பு செய்திருப்பது வேதனை அளிக்கிறது. அவர் எப்போதும் தனது குடும்ப வாழ்க்கையில் இருந்து அரசியலை ஒதுக்கியே வைத்திருக்கிறார்.

இந்த ஏஐ விடியோ மூலம் நாட்டைத் தவறாக வழிநடத்தவும், அனைத்து தாய்மார்களை அவமதிக்கவும் செய்யறிவை (AI) காங்கிரஸ் பயன்படுத்துகிறது. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்தில் பிரதமர் முறையிடுவார்’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், விடியோ குறித்த பாஜகவின் கண்டனத்தை மறுத்த காங்கிரஸார், விடியோவில் யாரும் அவமதிக்கப்படவில்லை. தனது குழந்தைக்கு ஒரு தாய் கல்வி கற்பிப்பதைப் பற்றித்தான் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோரின் கடமை. தாய் கல்வி கற்பிப்பதை அவமரியாதை என்று நினைத்தல் கூடாது’’ என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:ராமரைப் பின்பற்றாத ஸ்டாலினுடன் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஏன்? அனுராக் தாக்குர்

BJP On AI Video Of PM Modi's Mother Heeraben Modi

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயின்று வந்த மாணவி... மேலும் பார்க்க

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து உயர்நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: மேற்கு வங்கம் வழியாக நாடு திரும்பிய 2,000 இந்தியர்கள்!

நேபாளத்தில் வன்முறை வெடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து சுமார் 2,000 இந்தியர்கள் மேற்கு வங்கத்தின் பனிடான்கி எல்லை வழியாகத் தாயகம் திரும்பியுள்ளனர். நேபாள நாட்டில் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டது ... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயிலில் மோரீஷஸ் பிரதமர் வழிபாடு!

மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராமகூலம் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். இந்தியா உடனான நல்லுறவை மேலும் விரிவாக்கும் நோக்கில், மோரீஷஸ் பிரதமா் ராமகூலம் 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்குக்... மேலும் பார்க்க

கூகுள் செய்யறிவு பயன்பாட்டில் ஹிந்தி அறிமுகம்!

தேடுபொறி தளமான கூகுள் தன்னுடைய செய்யறிவு பயன்பாட்டில் இந்தியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஏஐ மோட், ஜெமினி 2.5 என்ற இயங்குதளத்தால் இயக்கப்படுகிறது.கூகுள் தேடுபொறி இணையதளம், முதலில் கடந்த மார்ச் மா... மேலும் பார்க்க

ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நிறுவனர் ஜகதீப் சோக்கர் காலமானார்!

புது தில்லி: கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் இணை நிறுவனருமான ஜகதீப் எஸ் சோக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 81.நாட்டின் தேர்தல்களில் நடக்கும் முறைகேடுகள... மேலும் பார்க்க