செய்திகள் :

இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைய காரணம் இதுதான்; முன்னாள் கேப்டன் விளக்கம்!

post image

இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியடைவதற்கான காரணம் குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லாட்டீஃப் பேசியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நடப்பு சாம்பியனான இந்திய அணி அதன் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி நாளை மறுநாள் (செப்டம்பர் 12) அதன் அடுத்தப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், உணர்ச்சிவசப்படுவதால் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் அணி அடிக்கடி தோல்வியடைவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லாட்டீஃப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் நாங்கள் உணர்ச்சிவசப்பட்டோ அல்லது அதிகப்படியான எதிர்பார்ப்பிலோ அனைத்து விஷயங்களும் சரியாக ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என நினைக்கிறோம். இந்தியாவுக்கு எதிராக போட்டியை நாங்கள் ஆழமாக எடுத்துச் செல்வதில்லை. இதன் காரணமாகவே, பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் அடிக்கடி தோல்வியடைகிறது. ஆனால், இந்திய அணி வீரர்கள் ஆடுகளத்தின் தன்மை மற்றும் போட்டியின் சூழலுக்கேற்ப விளையாடுகிறார்கள். அதனால், அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 15 போட்டிகளில் 12 போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The former captain of the Pakistan team has spoken about the reason behind the team's defeat in matches against India.

இதையும் படிக்க: ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் நிர்வாணமாக திடலை வலம் வருவேன்: மேத்யூ ஹைடன்

ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் நிர்வாணமாக திடலை வலம் வருவேன்: மேத்யூ ஹைடன்

ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் மெல்போர்ன் கிரிக்கெட் திடலை நிர்வாணமாக வலம் வருவேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இ... மேலும் பார்க்க

புதிய சாதனையை நோக்கி நகரும் லிட்டன் தாஸ்!

சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஹாங் க... மேலும் பார்க்க

பிசிசிஐ-யின் அடுத்த தலைவரா? சச்சின் டெண்டுல்கர் விளக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ-யின் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்... மேலும் பார்க்க

காஞ்சனா 4 படத்தினால் வீட்டையே பள்ளிக்கூடமாக மாற்றிய ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் குழந்தைகளுக்காக தனது முதல் வீட்டை இலவச பள்ளிக்கூடமாக மாற்றியுள்ளார்.காஞ்சனா 4 படத்தின் மூலம் கிடைத்த முன்பணத்தை வைத்து இந்தப் பள்ளிக்கூடத்தை தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். நடிகர்... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹாங் காங்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஹாங் காங் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்று வர... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு எதிராக ஹாங் காங் பேட்டிங்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங் காங்குக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் வங்கதேச... மேலும் பார்க்க