செய்திகள் :

பிசிசிஐ-யின் அடுத்த தலைவரா? சச்சின் டெண்டுல்கர் விளக்கம்!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ-யின் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தன்னுடைய 70 வயதை எட்டியதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

2022 ஆம் ஆண்டில் தலைவராக நியமிக்கப்பட்ட ரோஜர் பின்னி, பிசிசிஐ சட்​ட​வி​தி​களின்​படி, 70 வயதைக் கடந்​தவர் பதவி​யில் தொடர முடி​யாது என்​ப​தால் இந்த முடிவை எடுத்திருந்தார்.

இதற்​கிடையே அடுத்த பிசிசிஐ தலை​வ​ராக இந்திய கிரிக்கெட் அணியின் உச்ச நட்சத்திரமாக இருந்த முன்னாள் வீரர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதில், சௌரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இதனை முற்றிலுமாக மறுத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் இதுதொடர்பாக அவருடைய எஸ்​ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறு​வனம் சார்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “பிசிசிஐ-யின் தலை​வர் பதவிக்கு சச்​சின் டெண்​டுல்​கரின் பெயர் பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ள​தாகப் பரவிவரும் செய்​தி​களும், வதந்​தி​களும் எங்​கள் கவனத்​துக்கு வந்துள்ளன.

இதுபோன்ற ஆதாரமற்ற ஊகங்களையும், வதந்திகளையும் நம்பவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்​பை​யில் வருகிற 28 ஆம் தேதி பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்​கூட்​டம் நடை​பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், புதிய தலை​வர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Speculations of Sachin Tendulkar being next BCCI President ‘unfounded’

காஞ்சனா 4 படத்தினால் வீட்டையே பள்ளிக்கூடமாக மாற்றிய ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் குழந்தைகளுக்காக தனது முதல் வீட்டை இலவச பள்ளிக்கூடமாக மாற்றியுள்ளார்.காஞ்சனா 4 படத்தின் மூலம் கிடைத்த முன்பணத்தை வைத்து இந்தப் பள்ளிக்கூடத்தை தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். நடிகர்... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹாங் காங்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஹாங் காங் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்று வர... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு எதிராக ஹாங் காங் பேட்டிங்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங் காங்குக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் வங்கதேச... மேலும் பார்க்க

அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; கபில் தேவ் கொடுத்த முக்கிய அறிவுரை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் ... மேலும் பார்க்க

அடுத்தடுத்து வீரர்கள் காயமடைவதால் பிரச்னையில் தென்னாப்பிரிக்க அணி!

அடுத்தடுத்து வீரர்கள் காயமடைவதால் தென்னாப்பிரிக்க அணி புதிய பிரச்னையை சந்திக்க உள்ளது.நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 ஆம் ஆண்டுக்கான சுழற்சிக்கான போட... மேலும் பார்க்க

குல்தீப் யாதவ் பந்துவீச்சைக் கணிக்க முடியாது: முன்னாள் பாகிஸ்தான் வீரர்!

இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் புகழ்ந்து பேசியுள்ளார். ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் வாசிம் அக்ரம... மேலும் பார்க்க