செய்திகள் :

குல்தீப் யாதவ் பந்துவீச்சைக் கணிக்க முடியாது: முன்னாள் பாகிஸ்தான் வீரர்!

post image

இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் வாசிம் அக்ரமின் பேட்டி பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் செப்.9ஆம் தேதி முதல் தொடங்கின. இதில் இந்திய அணி நேற்று (செப்.10) யுஎஇ அணியை எதிர்த்து விளையாடியது.

இந்தப் போட்டியில் யுஎஇ அணி 13.1 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, அடுத்து விளையாடிய இந்திய அணி 4.3 ஓவர்களில் 60/1 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் 2.1 ஓவர்களில் 7 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இவரைக் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் சோனி ஸ்போர்ட்ஸில் பேசியதாவது:

லெக்-ஸ்பின்னர், கூக்லி, ஃபிலிப்பர் - இங்கு உட்கார்ந்துகொண்டு என்னாலும் கணிக்க முடியவில்லை. ரீப்ளேவிலும் அதைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது.

குல்தீப் யாதவை மிகவும் இள வயதில் கேகேஆர் அணியில் சந்தித்து இருக்கிறேன். அவரும் முகமது ஷமியும் காலை உணவு. மதிய உணவு, இரவு உணவு, போட்டியின்போது என எப்போதும் என்னுடன் இருப்பார்கள்.

அவர்கள் போட்டியில் விளையாடாவிட்டாலும் எனதருகில் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு விக்கெட் எடுக்க வேண்டும் என்ற பசி அதிகமாக இருந்தது. குல்தீப் யாதவுக்கும் அது இருந்தது.

ஒருமுறை முகமது ஷமி என்னை விமான நிலையத்தில் காரில் கொண்டுவந்து விட்டார். ஏன் எனக் கேட்டேன்? அதற்கு அவர், ‘நீங்கள் பொதுவாக என்ன பேசினாலும் கேட்க வேண்டும்’ எனப் பதிலளித்தார்.

இருவருமே இந்திய நாட்டிற்காகச் சிறப்பாகச் செயல்படுவார்கள் எனக் கூறினார்.

Former Pakistan player Wasim Akram has praised Indian spinner Kuldeep Yadav.

அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; கபில் தேவ் கொடுத்த முக்கிய அறிவுரை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் ... மேலும் பார்க்க

அடுத்தடுத்து வீரர்கள் காயமடைவதால் பிரச்னையில் தென்னாப்பிரிக்க அணி!

அடுத்தடுத்து வீரர்கள் காயமடைவதால் தென்னாப்பிரிக்க அணி புதிய பிரச்னையை சந்திக்க உள்ளது.நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 ஆம் ஆண்டுக்கான சுழற்சிக்கான போட... மேலும் பார்க்க

தனது அபார பந்துவீச்சுக்கான ரகசியம் பகிர்ந்த ஷிவம் துபே!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷிவம் துபே தனது அபார பந்துவீச்சுக்கான ரகசியம் பகிர்ந்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று (செப்டம்பர் 10) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும்... மேலும் பார்க்க

காயம் காரணமாக ஆரோன் ஹார்டி விலகல்..! புதிய ஆல்-ரவுண்டர் சேர்ப்பு!

இந்தியா ’ஏ’க்கு எதிரான தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய ’ஏ’ அணியின் ஆல்ரவுண்டர் ஆரோன் ஆர்டி விலகியுள்ளார். தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆரோன் ஆர்டி விலகியுள்ளது ஆஸி. அணிக்கு பின்னடைவை ஏற்... மேலும் பார்க்க

மகளிர் உலகக் கோப்பையில் அனைத்து நடுவர்களுமே பெண்கள்..! ஐசிசி அதிரடி!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடுவர்கள் அனைவருமே பெண்களாக நியமித்து ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்தியா, இலங்கையில் செப்.30ஆம் தேதி முதல் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. மகளிர் உலகக் கோப்பையில்... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது! உச்ச நீதிமன்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.ஆசியக் கோப்பை ஆடவர் கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் இந்தியாவும் ப... மேலும் பார்க்க